இறுதிப் பேரழிவு
நம் பூமி ஒரு
நீர்கிரகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது.
அறிமுக உரை.
மனித குலத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
தற்பொழுது புவி அறிவியலில் சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.குறிப்பாக கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்கள் அண்டார்க்டிகா ,ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் உண்மையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பது கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இருக்கும் பொழுது பிரிந்த நீர் வெளிவந்து கடலில் கலந்ததால் கடல்மட்டம் உயர்ந்து இருப்பதும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகக் கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை அதிகமாக இருந்ததால் துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்தால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்து இருப்பதுடன், அதன் காரணமாகத் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
உண்மையில் கடல் மட்ட உயர்வால் பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.ஆனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதே காரணம் என்று தவறாக விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் புதை படிவ ஆதாரங்கள் மூலம் பூமியின் கடந்த காலத்தில் கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஒரே கால கட்டத்தில் ஏற்பட்டு இருப்பது,புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது பெரும் பகுதியாக இருப்பதுடன் பூமியானது குல்ரிந்து கொண்டு இருப்பதால்,பாறைக் குழம்பில் இருந்து நீர் பிரிந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதும் தொடரும்.
இதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலப் பகுதிகள் யாவும் மூழ்கும்.
எனவே மனித குலத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
***********************************************************************
ஒன்று
கடல் மட்டம் உயர்ந்து
கொண்டு இருப்பதற்கு சுடு நீர் ஊற்றுகள் வழியாக பூமிக்குள் இருந்து சுரக்கும் நீரே
காரணம் என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்பொழுது கடல் மட்டம்
உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளிவிடும் கரிய மில
வாயு வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமியின் வெப்ப நிலை உயர்ந்து
கொண்டு இருப்பதாகவும் அதனால்,துருவப் பகுதிகளில் இருக்கும்
பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று விளக்கம் கூறப்
படுகிறது.
இந்த நிலையில் புதை
படிவ ஆதாரங்கள் மூலம் பூமியின் கடந்த கால கட்டத்தில் ,ஒரே கால கட்டத்தில்
கடல் மட்ட உயர்வும் பனிப்பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் கடல் மட்டம்
உயர்ந்து கொண்டு இருப்பதற்கு துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி
நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது தெரிய
வந்துள்ளது.
குறிப்பாக அக்ரோ
போர்ட்டா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவள உயிரினமானது பதினைந்து அடி ஆழமுள்ள
கடல் பகுதியில் வசிக்கக் கூடியது. இந்தப் பவளங்கள் இருக்கும் பொழுது அந்தப்
பவளத்தால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் படிவதால் மான் கொம்பு போன்ற பவளத்
திட்டு உருவாக்கி வளர்கிறது. இவ்வாறு உருவாகும் அக்ரோ போரா பால்மேட்டா
பவளத்திட்டனது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.
இந்த நிலையில் கடல்
மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிகமாக வளர்ந்தால்,அந்தப் பவளத் திட்டில்
உள்ள பவளங்கள் இறந்து விடுவதுடன்,அந்தப் பவளத் திட்டில்,ஆழமான கடல் பகுதியில்
வாழக் கூடிய வேறு வகை பவளங்கள் வாழத் தொடங்குகின்றன.
இந்த நிலையில்,கடலுக்கு அடியில்
வெவ்வேறு ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அக்ரோ போரா பவளத் திட்டுகள் எப்பொழுது
இறந்தன என்பதை கார்பன் காலக் கணிப்பு முறை மூலம் மதிப்பிடுவதன் மூலம்,கடல் மட்டம் எப்பொழுது
எவ்வளவு வேகத்தில் உயர்ந்து இருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
இந்த முறையில் கரீபியன்
கடல் பகுதியிலும் ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியார் ரீப் பகுதியிலும் மூழ்கிக்
கிடக்கும் பவளத் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த ஐம்பதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டமானது,நானூறு அடி வரை தாழ்வாக
இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று கோபன் கேகன்
பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் பகுதியில் பனித் தரைக்கு
அடியில் இருந்த தாவரங்களின் பாகங்கள்,மற்றும் இறந்து கிடந்த
விலங்குகளின் கழிவுகள் மற்றும் அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவு
ஆகியவற்றை சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில்
கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,வட துருவப் பகுதியில்
அதிக அளவில் பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதனை பனி யானைகள் உள்பட
விலங்குகள் உண்டு இருப்பதும்,அதன் பின்னர் பனிப் பொழிவால்,பூக்கும் தாவரங்களின்
எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் பிறகு இருபதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்தால் பூக்கும் தாவரங்கள் குறைந்ததகவும்,பத்தாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவால் புற்கள் மட்டுமே இருந்ததால் அவற்றை உண்ட பனி
யானைகள் சத்துக் குறை பாட்டால் இறந்து இருப்பதும் தெரிய வந்துள்ளதாக,ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு கடந்த
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால
கட்டத்தில் கடல் மட்டம் உயர்ந்து இருப்பதுடன்,பனிப் பொழிவும்
ஏற்பட்டு இருப்பதன் மூலம்,கடல்
மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்தால் பூமியின் வெப்ப நிலை குறைந்து
இருப்பதும் அதன் காரணமாகப் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் எடுத்துக் காட்டப்
படுகிறது.
மாறாக கடல் மட்ட
உயர்வுக்குப் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப்
படும் விளக்கம் தவறு என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
குறிப்பாகத் தற்பொழுது
பூமியில் உள்ள பனிப படலங்கள்,மற்றும் பனியாறுகள் மொத்தமும்
உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான்
கடல் மட்டம் உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால் கடலுக்கு அடியில்
மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த ஐம்பதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்
கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து
இருக்கின்றனர்.
இவ்வாறு அதிகப் படியாக
கடல் மட்டம் உயர்ந்ததற்கு வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது பூமியானது
சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் பொழுது சில காலம்,அந்த நீள் வட்டப் பாதையானது
பெரிதாகிய பிறகு மறுபடியும் சிறிதாகுவதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு பூமியின் நீள்
வட்டப் பாதையானது பெரிதாகும் பொழுது,பூமியானது சூரியனை
விட்டு விலகிச் செல்வதால் ,பூமியின்
வெப்ப நிலையானது குறைவதாகவும் அதனால் பூமியின் மேல் பல கிலோ மீட்டர் உயரத்துக்கு
பனிப் படலங்கள் உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு பூமியின் மேல்
பல கிலோ மீட்டர் உயரத்துக்குப பனிப் படலங்கள் உருவானதால் கடல் மட்டம் பல நூறு அடி
வரை இறங்கியதாக விளக்கம் கூறப் படுகிறது.
அதன் பிறகு மறுபடியும்
பூமியானது சூரியனை நோக்கி நெருங்கி வந்து சிறிய வட்டப் பாதையில் வலம் வரத்
தொடங்கிய பொழுது,பூமியின்
வெப்ப நிலை அதிகரித்ததாகவும்,அதனால் பனிப் படலங்கள் உருகி
நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் மறுபடியும் உயர்ந்ததாகவும் விளக்கம் கூறப்
படுகிறது.
இந்த விளக்கம் தவறு.
ஏனென்றால் பூமியின்
வெப்ப நிலை குறையும் பொழுது கடல் நீரும் ஆவியாகுவது குறைந்து விடும்.எனவே ஏற்கனவே
நிலத்தின் மேல் உள்ள வளி மண்டலத்தில் இருக்கும் நீர்தான் நிலத்தின் மேல் பனிப்
படலங்களாகப் படியும்.
எனவே பூமியின் வெப்ப
நிலை குறைந்தாலும் கூட கடல் மட்டதில் மாற்றம் ஏற்படாது.
அதே போன்று மறுபடியும்
பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி
நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,கடல் நீறு ஆவியாகத்
தொடங்கும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்தாலும் கூட கடல் மட்டத்தில் மாற்றம்
ஏற்படாது.
எனவே கடல் மட்டமானது
நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி
எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையில் காரணம் என்ன? என்ற கேள்வியும்
எழுகிறது.
இந்த நிலையில் ஜப்பான்
நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள்
வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற
ஆராய்ச்சியாளர்,அந்த
நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப்
பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.
இதே போன்று கடலுக்கு
அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது. எனவேகோடிக்
கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து
இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள்
வழியாக,வெளி
வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.
சமீபத்தில் கூட நார்த்
வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை
ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக்
காட்டிலும்,பூமிக்கு
அடியில்,மூன்று
மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில்
பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து
வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே பூமிக்கு அடியில்
இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.
பூமிக்கு அடியில்
இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து பறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரே
சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து
கொண்டு இருக்கிறது.
பூமிக்கு அடியில்
பெரும் பகுதியாக பாறைக் குழம்பு இருப்பதுடன்,பூமியானது தொடர்ந்து
குளிர்ந்து கொண்டு இருப்பதால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில்
இருந்து நீரும் தொடர்ந்து பிரிந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலந்து
கொண்டு இருப்பதும் தொடரும்.
எனவே கடல் மட்டமானது
தொடர்ந்து உயர்ந்து நிலப் பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும்.இதனால் தாவரங்கள்
மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கை முற்றிலுமாக அழியும்.
இரண்டு
டைனோசர்கள் காலத்தில்
கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக
இருந்திருக்கிறது.
குறிப்பாக நார்வே
நாட்டுக் கடல் பகுதியிலும்,எண்ணெய்
எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல்
தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ,இருபது கோடி
ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக்
கண்டத்தில் பரவலாக வாழ்ந்த பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் தாவரஉண்ணி
டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதையும் தற்செயலாகக் கண்டு பிடித்து
இருக்கின்றனர்.
இதே போன்று,பிரிட்டிஷ் தீவுக்கு
வடகிழக்கே, செட்லாண்ட்
தீவுக்கு அருகில் ,கடல்
மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,பத்தாயிரம் சதுர கிலோ
மீட்டர் பரப்பளவுள்ள நிலப் பகுதி மூழ்கிக் கிடப்பதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.
அந்தக் கடலடி நிலத்தில்
இருந்து படிவங்களைச் சேகரித்து ஆய்வு செய்ததில் ,அந்தப் படிவுகளில்,நிலக் கரி உள்பட,பூக்களின் மகரந்தத்
துகள்கள் இருப்பதும், அதன்
அடிப்படையில்,அந்த
நிலப் பகுதியானது ,ஐந்து
கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதும், அதன் பிறகு கடலால்
மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும், தெரிய வந்திருப்பதாக
அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்தியப்
பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்
மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும் கடலடிப் பீட
பூமியில்,இருந்து
எடுக்கப் பட்ட,ஒன்பது
கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைப் பதிவுகளிலும் கூட,மரங்களின் கருகிய
பாகங்கள்,விதை
மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் பிரிட்டிஸ் நாட்டின் புவியியல்
வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
அத்துடன் அந்தத்
தீவானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்ததாகவும் ,அதன் பிறகு கடலால்
மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும்,தெரிய வந்திருப்பதாக அந்த
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இவ்வாறு டைனோசர்கள்
காலத்தில் ,கடல்
மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனோசர்களின் புதை
படிவங்களுடன்,அதில்
தாவரங்களின் புதை படிவங்களும் காணப் படுவதன் அடிப்படையில்,டைனோசர்கள் காலத்தில்
கடல் மட்டமானது,தற்பொழுது
இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில்
காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக
நிரூபணமாகிறது.
மூன்று
டைனோசர்கள் காலத்தில்
பூமியின் வெப்ப நிலை துருவப் பகுதிகளிலேயே அதிகமாக இருந்திருக்கிறது.
தற்பொழுது ஆர்க்டிக்
வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் வட அமெரிக்காவின் வட பகுதியில் உள்ள
கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,சைபீரியாவின் வட பகுதியில் உள்ள
காக்கநாட்டு ஆற்றுப் பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த,பத்துக்கும்
மேற்பட்ட இனவகையைச் சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
குறிப்பாக சைபீரியாவின்
காக்க நாட்டு ஆற்றுப் பகுதியில்,பல இன வகையைச் சேர்ந்த
டைனோசர்களின்
புதை படிவங்களுடன்,டைனோசர்களின்
முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்
ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருப்பதாக
வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
ஒன்பது மாதங்கள் உறை
பனி நிலையில் இருக்கிறது.மூன்று மாதங்கள் மட்டுமே ஜீரோ டிகிரிக்கு மேலே ஒரு சில
டிகிரி உயர்கிறது.ஆனால் ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசர்களின் முட்டைகள் பொரிவதற்கு
முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
ஆனால் ஆர்க்டிக் வளையப்
பகுதியில் தற்பொழுது ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரி யாக இருக்கிறது.
இதே போன்று தென்
துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திலும் கூட ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள்
கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே ஆர்க்டிக்
பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் காணப்
படுவதன் அடிப்படையில், டைனோசர்கள்
காலத்தில், ஆர்க்டிக் வளையப் பகுதியில் ,
பூமத்திய
ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருப்பது
எடுத்துக் காட்டப் படுகிறது.
குறிப்பாக டைனோசர்கள்
காலத்தில் கடல் மட்டமானது. தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர்
தாழ்வாக இருந்திருப்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.
அதே போன்று
டைனோசர்களின் காலத்தில் பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருப்பதற்கும்
ஆதாரங்கள் இருப்பதால்,டைனோசர்களின்
காலத்தில் பூமியின் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பதற்கு,கடல் மட்டம் தாழ்வாக
இருந்ததும் அதன் காரணமாக கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததுமே காரணம் என்பதும்
எடுத்துக் காட்டப் படுகிறது.
அதன் பிறகு கடல் மட்டம்
உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப
நிலை குறைந்து இருப்பதும், அதன்
காரணமாகத் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் எடுத்துக்
காட்டப் படுகிறது.
நான்கு
டைனோசர்கள் காலத்தில்
பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்க வில்லை.
தற்பொழுது பூமியின் தன்
அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில்
தொடர்ந்து ஆறு மாத காலம் பகலும் அதே போன்று தொடர்ந்து ஆறு மாத காலம் இரவும்
நீடிக்கிறது.
இவ்வாறு ஆர்க்டிக்
பகுதியில் தொடர்ந்து ஆறு மாத காலம் இரவு நீடிக்கும் பொழுது,வெப்ப நிலையானது மைனஸ்
முப்பது முதல் ஐம்பது டிகிரி வரை இறங்குகிறது.
இது போன்று மாதக்
கணக்கில் இரவு நீடிக்கும் பொழுது,சூரிய ஒளியின்றி தாவரங்களால்
ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது.
அதே போன்று மாதக்
கணக்கில் உறை பனிச் சூழல் நிலவும் பொழுது தரைக்கு அடியில் இருக்கும் நீரும் உறை
நிலையில் இருப்பதால்,தாவரங்களால்
நீரை உறிஞ்ச இயலாது.அதே போன்று தாவரங்களுக்கு உள்ளே இருக்கும் நீரும் உறைந்து
விடும்.எனவே பல மாதங்கள் ஒளியும் நீரும் இன்றி தாவரங்கள் இறந்து விடும்.
ஆனால் தாவரங்களை
உண்ணும் டைனோசர்களோ யானைக் கூட்டத்தை விட நான்கு மடங்கு அதிகத தாவரங்களை உண்ணக்
கூடியது.
எனவே பூமியின் அச்சு
சாய்ந்து இருக்கும் நிலையில் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்த அடர்ந்த
காடுகள் உருவாகி இருக்க இயலாது.
எனவே ஆர்க்டிக்
பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் காணப்
படுவதன் அடிப்படையில், டைனோசர்கள்
காலத்தில் பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்க வில்லை என்பது எடுத்துக்
காட்டப் படுகிறது.
எனவே டைனோசர்கள்
காலத்திற்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.பூமியின்
அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை
காரணமாக இருந்திருக்கலாம்.
ஐந்து
ஆர்க்டிக் பகுதியில்
டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில்
புவியியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
கடல் பகுதியைக் கடக்க
இயலாத டைனோசர்களின் புதை படிவங்கள், அண்டார்க்டிக்கா
மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய தீவுக் கண்டங்களில் ,காணப் படுவதற்கு,முன் இரு காலத்தில்
கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப்
பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று,கடுங் குளிர் நிலவும்
ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ் பெர்ஜன் என்று அழைக்கப் படும்
பனித் தீவில்,வெப்ப
மண்டலக் கால நிலை நிலவும் பிரதேசங்களில் வாழக் கூடிய தாவரங்களின் புதை படிவங்கள்
காணப் படுவதற்கு,முப்பது
கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக்
கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து
வந்ததே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று வட
அமெரிக்கக் கண்டத்தில்,மித
வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்து இருக்கும் அரிசோனா பாலைவனத்தில்,சதுப்பு நிலத்தில்
வாழக் கூடிய முதலை போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களும், ராட்சத மரங்களின் புதை
படிவங்களும் காணப் படுவதற்கு,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு
அந்த நிலப் பகுதியானது,அதிக
வெப்பம் நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் பின்னர்,வட அமெரிக்கக் கண்டம்
வட பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததால் அரிசோனாப் பகுதியானது, மித வெப்ப மண்டலப்
பகுதிக்கு வந்து சேர்ந்து விட்டது என்றும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் இந்தக் கருத்தின்
அடிப்படையில் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்களின் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பிளேட் டெக்டானிக் தியரியின்
அடிப்படையில் புவியியல் ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
ஏனென்றால் இந்தக்
கருத்தின் படி,வட
அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் இருக்கும் அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட
கிழக்குப் பகுதியில் இருக்கும் சைபீரியா பாலைவனப் பகுதியும்,கடந்த பத்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்கும் வந்து
விட்டது.
குறிப்பாக இருபத்தி
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா
என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி
ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம்
உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், அதே போன்று கோண்டுவானா
என்ற கண்டம் உருவாகித் தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு எட்டு கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப்
பிரிந்ததால் வட அமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி, எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்ததால், இந்த
இரண்டு கண்டங்ளுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி
கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, வட அமெரிக்கக்
கண்டத்தின் வட பகுதியில் இருக்கும் அலாஸ்காவின் கொல் வில்லி ஆற்றுப் பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட
கிழக்குப் பகுதியில் இருக்கும் சைப்பீரியாவின் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியும் ,கடுங் குளிர் நிலவும்
ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டது.
இந்த நிலையில்
தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் வட அமெரிக்காவின் வட
பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,சைபீரியாவின் வட
பகுதியில் உள்ள காக்கநாட்டு ஆற்றுப் பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த,பத்துக்கும்
மேற்பட்ட இனவகையைச் சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
எனவே கடுங் குளிர்
நிலவும் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி முட்டையிட்டு இனப் பெருக்கம்
செய்தன?வெப்ப
மண்டலக் காடுகள் எப்படி ?என்ற
கேள்விகள் இன்று வரை விடை கூற இயலாத கேள்விகளாகவே இருக்கின்றன.
இவ்வாறு டைனோசர்களின்
புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் காணப் படுவதற்கு கண்டங்கள் ஒன்றாக இருந்து
பிரிந்த நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கருத்தின் அடிப்படையில் விளக்கம்
கூற இயலாத நிலையில்,டைனோசர்களின்
காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப்
பட்ட நிலையில்,கடல்
மட்டம் தாழ்வாக இருந்ததால்,கடலின்
பரப்பளவும் குறைவாக இருந்திருப்பதும், அதன் காரணமாக வளி
மண்டலத்தில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக்
காட்டப் படுகிறது.
அதன் பிறகு கடல் மட்டம்
உயர்ந்ததால், கடலின்
பரப்பளவும் அதிகரித்ததால், வளி
மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்து இருப்பதும், துருவப் பகுதிகளில்
பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும், அதன் காரணமாகத் துருவப்
பகுதிகளில் தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக
எடுத்துக் காட்டப் படுகிறது.
ஆறு
டைனோசர்கள் காலத்தில்
கண்டங்கள் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருக்கின்றன.
தமிழகத்தில் ஆசிய வகை
டைனோசர் ட்ரூடோண்ட்
லேட் கிரட்டேசியஸ்
என்று அழைக்கப் படும் காலத்தில் இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக
நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படும் நிலையில்,அதே கால கட்டத்தில்,ஆசியக் கண்டத்தில்
பரவலாக வாழ்ந்த ட்ரூடோண்டிட் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு
பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே லேட் கிரட்டேசியஸ்
காலத்தில் வாழ்ந்த ட்ரூடோண்டிட் டைனோசரின்
புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதன் அடிப்படையிலும் கூட
டைனோசர்கள் காலத்தில் இருந்தே கண்டங்கள் எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே நிலையாக
இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப்
படுகிறது.
பிளேட் டெக்டானிக்
தியரியின் படி ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கா, இந்தியா,ஆப்பிரிக்கா ஆகிய தென்
பகுதிக் கண்டங்களானது ,வட
பகுதிக் கண்டங்களுடன், நிலத்
தொடர்பு இன்றி இருந்ததாக நம்பப் படுகிறது.
ஆனால் இந்தக்
காலத்தில் வட அமெரிக்காவில்
பரிணாம வளர்ச்சி அடைந்த பாலூட்டி வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் தென்
அப்குதிக் கண்டங்களான தென் அமேரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும்
இந்தியா ஆகிய கண்டங்களி காணப் படுவதன் மூலம், ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது
டைனோசர்கள் அழிந்த காலத்தில், கண்டங்கள் எல்லாம்
தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.
குறிப்பாக இருபத்தி
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக
இருந்ததாகவும், அந்தப்
பெருங்கண்டத்தைச் சுற்றி பாந்த லாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அத்துடன் அந்தப் பெருங்
கண்டமானது ,வட துருவப் பகுதியில் தொடங்கி தென் துருவப் பகுதி வரை
தொடர்ச்சியாக இருந்ததாகவும்,பதினெட்டு முதல் பதினைந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம்
உருவாகி,வட
பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவானா என்ற
கண்டம் உருவாகித தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்த தாகவும்,அதனால் இந்த இரண்டு
கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு,எட்டு கோடி ஆண்டுகளுக்கு
முன்பு வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும்,இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும்
யுரேசியா ஆகிய கண்டங்கள் உருவானதாகவும், இதில் வட அமெரிக்கக்
கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று யூரேசியக்
கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
அத்துடன் பாஞ்சியாக்
கண்டத்தில் இருந்து பிரிந்து தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படும்
கோண்டுவானாக் கண்டமும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,பல பகுதிகளாகப்
பிரிந்ததாகவும்,அதனால்,தென் அமெரிக்காக் கண்டம்
உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம்
ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து வட அமெரிக்கக்
கண்டத்துடன் இணைந்ததாகவும்,அதற்கு
முன்பு வரை தென் அமெரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்பப்
படுகிறது.
தென் அமெரிக்கக்
கண்டதைப் போலவே, ஆப்பிரிக்கக் கண்டமும், கோண்டுவானாக்
கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து வந்து, மூன்று
கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் ஆல்ப்ஸ் மலைத்
தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று, இந்தியக் கண்டமும், கோண்டுவானாக்
கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து
கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென்
பகுதியுடன் மோதியதால்,இமய
மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது,டைனோசர்கள் அழிந்த
காலகட்டத்தில்,தென்
அமெரிக்கா,இந்தியா,ஆப்பிரிக்கா,ஆகிய நிலப்
பகுதிகளானது, வட
பகுதிக் கண்டங்களுடன் நிலத் தொடர்பின்றி இருந்ததாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் ஸ்டோனி
புரூக் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த உடற்கூறியல் வல்லுனரான டாக்டர்,மாவ்ரீன் ஒ லியரி
தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஒப்பாய்வில்,வட அமெரிக்காவில் கண்டு
பிடிக்கப் பட்ட ஆறரைக் கோடி ஆண்டுகள் தொன்மையான புரோட்டோ அங்குலேட்டம் டோனா என்ற
விலங்கே தற்போதுள்ள எல்லா பாலூட்டி வகை விலங்கினங்களின் பொது மூதாதை என்று
தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் அந்த விலங்கானது நீந்தவோ பறக்கவோ இயலாத விலங்கு
என்றும் டாக்டர்,மாவ்ரீன்
ஒ லியரி தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தென்
அமெரிக்கக் கண்டத்தில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அல்சிடெடோர் பிக்னியா
என்று பெயர் சூட்டப் பட்ட பாலூட்டி விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
குறிப்பாக அந்த
விலங்கின் இனவகைகளானது, வட
அமெரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்தில் சீனாவில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு
உருவான பாறைப் படிவுகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்
அல்சிடெடோர் பிக்னியா விலங்கினமானது,ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு ,வட அமெரிக்கக் கண்டம்
வழியாகத தென் அமெரிக்கக் கண்டத்திற்கு வந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள்
விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் தென்
அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே நிலையாக இருந்திருப்பதும்
ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று
ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆறு
கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,பன்றியின் அளவுள்ள,எரிதீரியம் அசொசோரம்
என்று பெயர் சூட்டப் பட்ட , மூதாதை யானையின் புதை படிவங்களை,லண்டன்
அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் இமானுவேல் கீயர் பிராண்ட் குழுவினர்
கண்டு பிடித்துள்ளனர்.
இதன் மூலம்
ஆப்பிரிக்கக் கண்டமும் ஆறரைக் கோடி ஆண்டு காலமாக தற்பொழுது இருக்கும் இடத்திலேயே
நிலையாக இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று இந்தியக்
கண்டமும் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து வந்து, ஐந்து
கோடி ஆண்டுகளுக்கு முன்புதான், ஆசியக் கண்டத்தின் தென்
பகுதியுடன் மோதியதால்,இமய
மலைத் தொடர் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,தென் இந்தியாவில்
ஆந்திரா மாநிலத்தில் நஸ்கல் என்ற கிராமத்தில்,ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டி வகை விலங்கினத்தின் புதை படிவங்களை,பஞ்சாப் பல்கலைக்
கழகத்தைச் சேர்ந்த,டாக்டர்
அசோக் சாகினி என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர்,கண்டு பிடித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் டாக்டர் அசோக் சாகினி
அவார்கள்,ஆறரைக்
கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வட பகுதிக் கண்டங்களில் இருந்து
தனித்து இருந்திருக்க வில்லை என்று,நேட்சர்
பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு, வட
பகுதிக் கண்டங்களில் வாழ்ந்த, பாலூட்டி வகை
விலங்கினங்களின் புதை படிவங்களானது, தென் பகுதிக்
கண்டங்களான, தென்
அமெரிக்கா,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவில்
கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம், ஆறரைக் கோடி
ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்கள்
எல்லாம் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக
எடுத்துக் காட்டப் படுகிறது.
ஏழு
தீவுகளில் காணப் படும்
குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்,இரண்டு கோடி ஆண்டுகளில்
கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
மடகாஸ்கர் தீவில்
ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு
பிடிக்கப் பட்டுள்ளது.
அந்த எலும்புப் புதை
படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது
தெரிய வந்துள்ளது.
குள்ள வகை நீர் யானைகள்
இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த
விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ
இயலாது.
அதன் உடலும் நீண்டு
குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று
குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு
வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது.
லெமூர் குரங்குகள்
ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய
லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று
கருதப் படுகிறது.
ஆனால் குள்ளவகை நீர்
யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள்
மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.
இந்த நிலையில் புதை
படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ்
லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த
குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு குள்ள வகை
நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து
பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
அப்படியே ஆனாலும் கூட
மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள்
கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும்
என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அவ்வாறு வந்த பிறகு
இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது
அசாதாரணமான விளக்கம்.
இதில் ஹிப்போ பொட்டமஸ்
மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள
வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
இதே போன்று மடகாஸ்கர்
தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட
குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய
நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப்
படுகிறது.
அதாவது மடகாஸ்கர்
தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால்
குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
எனவே மடகாஸ்கர்
தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.
இவ்வாறு மடகாஸ்கர்
தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது.
எனவே கடல் மட்டம்
இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக்
கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து
இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்
எடுத்துக் காட்டப் படுகிறது.
இந்த நிலையில் மத்திய
தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய
தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மிகவும் அரிதாக இரண்டு
குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில்
வந்து சேர்ந்த பிறகு,வழக்கத்துக்கு
மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இ யற்கைக்கு மாறான
விளக்கம்.
எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை
நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம்,
கடல்
மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும்
தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது.
எட்டு
கடல் தளமானது நிலையாக
இருக்கிறது.
கண்டங்களுக்கு இடையில்
இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொன்மை அதிகமான பாறைத் தீவு இருப்பதன்
அடிப்படையில் கடல் தளமானது நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அட்லாண்டிக்
பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர்
தொலைவிற்கு உருவாகி இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் தொடரின் மத்தியப் பகுதியில் ,பூமிக்கு அடியில்
இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக
உருவாகுவதாக நம்பப் படுகிறது.
இதே போன்று மறுபடியும்
அதே இடத்திற்கு பாறைக் குழம்பு வந்து, ஏற்கனவே அப்பகுதியில்
உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு, மத்தியப் பகுதியில்
புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து
நடைபெறுவதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து
புதிய கடல் தளம் உருவாகிக் கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி
விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல்
தளங்களுடன், அட்லாண்டிக்
கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும், கிழக்கு மற்றும் மேற்கு
என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இவ்வாறு அட்லாண்டிக்
கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல்
தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு,அந்தக் கடலடி எரிமலைத்
தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளானது தொன்மை குறைவாக இருப்பதாகவும்,அந்தக் கடலடி எரிமலைத்
தொடரில் இருந்து தொலைவில் உள்ள பாறைகளின் தொன்மையானது அதிகமாக இருப்பதாகவும்
விளக்கம் கூறப் பட்டது.
ஆனால் தற்பொழுது அந்தக்
கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும், புனித பீட்டர் மற்றும்
புனித பால் பாறைத் தீவுகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி
ஆண்டுகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக எரிமலைத்
தீவுகளானது கூம்பு வடிவில் இருக்கும்.ஆனால் புனித பீட்டர் மற்றும் புனித பால்
பாறைத் தீவுகளில், எரிமலைப்
பாறைகளுக்குப் பதில் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன தீவாக இருப்பதுடன், சமதளத் தீவாகவும்
இருக்கிறது.
இதே போன்று ஆர்க்டிக்
கடலின் மத்தியப் பகுதியில், தொடர்ந்து
புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக
நம்பப் படும் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும்,இருநூறு கோடி ஆண்டுகள்
தொன்மையான பாறைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு கண்டங்களுக்கு
இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், நானூற்றி ஐம்பது
மற்றும் இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகளால் ஆன தீவுகள் மற்றும் பாறைகள்
இருப்பதன் மூலம், அந்தக்
கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை
நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பதுடன்,கடல் தளமானது நிலையாக
இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இந்த உண்மைக்கு மாறாக
கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய
கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதால்,கடந்த முன்னூறு கோடி
ஆண்டுகளில் பாஞ்சியா போன்று ஐந்தாறு சூப்பர் கண்டங்கள் உருவாகிப் பிரிந்து
விட்டதாகக் கற்பனையாக விளக்கம் கூறப் படுகிறது.
அதுமட்டுமின்றி இவ்வாறு
கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளங்களானது தொடர்ந்து உருவாகித் தனித் தனிப்
பாறைத் தட்டுகளாக நகர்ந்து, அவற்றின்
ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள்
ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் உலக அளவில் நில
அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி
வரை படத்தில்,கடல்தரையானது
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகளால் பிரிக்கப் படாமல்,தொடர்ச்சியாக
இருப்பதுடன் கடல் தரையானது நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய
வந்துள்ளது.
ஒன்பது
கடல் தரை தொடர்ச்சியாக
இருக்கிறது.
குறிப்பாக வட அமெரிக்கா
மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் வட அட்லாண்டிக் கடலுக்கு
அடியில் இருக்கும், கடலடி
மலைத் தொடர் பகுதியில், புதிய
கடல் தளம் உருவாகிக் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி கடல் தளமானது
நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதில் மேற்கு திசையை
நோக்கி நகர்ந்து செல்வதாகக் கூறப் படும் கடல் தளத்துடன், வட அமெரிக்கக்
கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று கிழக்கு
திசையை நோக்கி நகர்ந்து செல்வதாகக் கூறப் படும் கடல் தளத்துடன், ஐரோப்பா மற்றும் ஆசியா
கண்டங்கள், கிழக்கு
திசையை நோக்கியும், நகர்ந்து
கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று தென்
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் தென்
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர்
பகுதியில், புதிய
கடல் தளம் உருவாகி, வடமேற்கு
மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு
இருப்பதாக நம்பப் படுகிறது.
இதில் வடமேற்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக்
கண்டமானது, வடமேற்கு
திசையை நோக்கியும், அதே போன்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு
இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது
வடகிழக்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு
இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
உணமையில் வட அமெரிக்கக்
கண்டமானது, அட்லாண்டிக்
கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளத்துடன், மேற்கு திசையை
நோக்கியும், அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது, அட்லாண்டிக் கடலின்
மத்தியப் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி
நகர்ந்து செல்லும் கடல் தளத்துடன், வட மேற்கு திசையை
நோக்கியும், நகர்ந்து
கொண்டு இருந்தால்,அட்லாண்டிக்
கடலின் மத்தியப் பகுதியில் இருந்து,வட அமெரிக்கா மற்றும்
தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுப் பகுதி வரை
தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் நாசா
என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த
புவியியல் வல்லுனர்கள், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்
உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரை படம்
ஒன்றைத் தாயாரித்து வெளியிட்டனர்.
ஆனால் உலக அளவில் நில
அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கக்
கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கரீபியன் தீவுப்
பகுதியில் இருந்து, அட்லாண்டிக்
கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாக
நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு இந்த இரண்டு
கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள்
ஏற்படாததன் அடிப்படையில், இந்த
இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளமானது தொடர்ச்சியாக
இருப்பதுடன்,கடல்
தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே வட அட்லாண்டிக்
கடலின் மத்தியப் பகுதியில், புதிய
கடல் தளமானது தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி
நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல்
தளங்களுடன் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய
கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைப்
பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், புவியியல்
ஆராய்ச்சியாளர்கள் கூறும் விளக்கமானது, அடிப்படை ஆதாரமற்ற
தவறான கருத்து என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று பத்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியாவும்
ஆஸ்திரேலியாவும் இணைந்த நிலையில், தென் துருவப் பகுதியில்
அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு
அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும், பூமிக்கு அடியில்
இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப்
புதிய கடல் தளமாக உருவாகி,வடக்கு
மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,இதில் வட கிழக்கு
திசையை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன் இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும்
வடகிழக்கு திசையை நோக்கி நம்பப் படுகிறது.
இவ்வாறு கடல்
தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து, அவற்றின் ஓரப்
பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,இவ்வாறு கடல்
தளங்களுடன் கண்டங்கள் நகரும் பொழுது, கண்டங்களுக்கு அடியில்
கடல் தளம் உரசிய படி நகர்வதால்தான், நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும்
ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.அனால்
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒட்டிக் கொண்டு
இருந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு பத்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவுக்கும்
ஆஸ்திரேலியாவுக்கும்
இடையில் இடைவெளி இல்லாத நிலையில், தற்பொழுது இருப்பதைப்
போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் இடை வெளியுடன், தற்பொழுது இருக்கும்
இடத்திற்கு நகர்ந்து வந்து இருக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு
கண்டங்களும், இரண்டு
தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு இந்த இரண்டு
கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வட கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு
கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு, பல்லாயிரம் கிலோ
மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் உருவாக வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட
உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த
இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில
அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக
நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், இந்த இரண்டு
கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன், நிலையாக இருப்பதும், அதனால் இந்த இரண்டு
கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
ஆப்பிரிக்கக்
கண்டத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக எரிமலைத் தொடர் ஏன் உருவானது?
குறிப்பாக
அண்டார்க்டிகா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச்
கண்டத்தைச்
சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து
கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்து தவறான
கருத்து.
ஏனென்றால் குறைந்த
சுற்று வட்டப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, அதிக சுற்று வட்டப்
பகுதியை நோக்கி ஒரே கடல் தளமாக கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்க இயலாது.
இந்த நிலையில்
ஆப்பிரிக்கக் கண்டதைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் எரிமலைத் தொடரானது
தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.
இதற்கு ஆப்பிரிக்கக்
கண்டமானது பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து கொண்டு இருப்பதே
காரணம்.ஆப்பிரிக்கக் கண்டம் பூமிக்கு அடியில்
இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால், ஆப்பிரிக்கக்
கண்டத்தைச் சுற்றிலும் உள்ள கடல் தளத்தில் பிளவுகள் ஏற்பட்டதால், அந்தப் பிளவுகள்
வழியாகப் பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது, மேல் நோக்கி
உயர்ந்ததால்,ஆப்பிரிக்கக்
கண்டத்தைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு கண்டங்கள்
எல்லாம் பூமிக்கு அடியில் இருந்தும் ,கடலுக்கு அடியில்
இருந்தும், மேல்
நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, காலப் போக்கில் புதை
படிவங்களாக உருவாகிக் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகின்றன.
அதே போன்று மலைகளின்
மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் அந்த மழையும் மலைகளைச்
சுற்றியுள்ள நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக
உயர்ந்ததே காரணம்.
பூமி குளிர்ந்து கொண்டு
இருக்கிறது.
இவ்வாறு டைனோசர்கள்
காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால், கடலின் பரப்பளவும்
குறைவாக இருந்ததால், பூமியின்
வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது,அதன் பிறகு கடல்
மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்தால்
பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதுடன், அதன் காரணமாக துருவப்
பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கிறது.
பூமிக்கு அடியில்
இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து பறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரே
சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து
கொண்டு இருக்கிறது.
பூமிக்கு அடியில்
பெரும் பகுதியாக பாறைக் குழம்பு இருப்பதுடன்,பூமியானது தொடர்ந்து
குளிர்ந்து கொண்டு இருப்பதால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில்
இருந்து நீரும் தொடர்ந்து பிரிந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலந்து
கொண்டு இருப்பதும் தொடரும்.
எனவே கடல் மட்டமானது
தொடர்ந்து உயர்ந்து நிலப் பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும்.இதனால் தாவரங்கள்
மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கை முற்றிலுமாக அழியும்.
எனவே மனித குலதின்
எதிர் காலமும் கேள்விக் குறியாகி இருக்கிறது.
பத்து
பூமிக்கு அடியில்
எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.
பூமிக்கு அடியில்
எரிமலைகள் வெடித்ததாலேயே, நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது, தரை
மட்ட மாறுபாடுகளை நுட்பமாகப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம், தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வட
அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாகாணத்தில் ‘மூன்று சகோதரிகள்’ என்று அழைக்கப் படும்
மூன்று எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
அந்த எரிமலைப் பகுதியை,
தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், எரிமலை
இயல் வல்லுனர்கள், கண்காணித்து
வந்தனர்.
குறிப்பாக அந்த
எரிமலையின் மேல் செயற்கைக் கோள் பறந்து செல்லும் பொழுது, செயற்கைக் கோளில் இருந்து
ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டன.
அந்த ரேடியோக் கதிர்களானது
தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில்
இருந்த நுட்பமான கருவிகள் மூலம் தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற
வண்ணங்களாக பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று மறுபடியும்
அதே எரிமலைப் பகுதியின் மேல் செயற்கைக் கோள் பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள் மூலம்
தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இவ்வாறு ஒரு எரிமலைப்
பகுதியின் மேல் வெவ்வேறு காலத்தில் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம், பதிவு
செய்யப் பட்ட தரை மட்ட மேடு பள்ளப் பதிவுகளைக் கணினி உதவியுடன், ஒரே
படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில்
அந்த எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மாற்றங்கள் கூட பதிவாகிறது.
உதாரணமாக இந்த முறையில்
ஒரு வயல் வெளியை உழுதிருந்தால் கூட கண்டு பிடித்து விட முடியும்.
இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில்
உள்ள எரிமலைப் பகுதியின் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது,
அந்தப் பகுதியில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி
மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.
‘ஆரிகன் புடைப்பு’ என்று அழைக்கப் பட்ட
அந்தப் பகுதிக்கு எரிமலை இயல் வல்லுனர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அப்பகுதியில் பூமிக்கு
அடியில் ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும்
அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு இருந்ததாகவும், அப்பகுதியில் பூமிக்கு
அடியில் புதிதாக ஒரு எரிமலை உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2004
ஆம்
ஆண்டு ஒரே மாதத்தில் அந்த புடைத்த பகுதியின் மத்தியப் பகுதியில் மட்டும்
முன்னூற்றி ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
எனவே பூமிக்கு அடியில்
எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில்
எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
எரிமலைகளைச் சுற்றி
உருவான மேடு பள்ள வளையங்கள்
இந்த நிலையில்,மியாமி
பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர்
தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், ஆப்பிரிக்காவின்
கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளைத் தரை மட்ட மாறுபாடுகளை ரேடியோ கதிர்
வீச்சு முறையில் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், கண்காணித்தனர்.
அப்பொழுது,அந்த எரிமலைகளைச்
சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய,
மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு எரிமலையைச்
சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில் மேடு பள்ளங்கள் உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது
உயர்ந்து இறங்குவதே காரணம் என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து
இருக்கின்றனர்.
குறிப்பாக ஒரு
எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரண்டு அந்த எரிமலை உயரும் பொழுது,அந்த எரிமலையைச்
சுற்றியுள்ள தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இதே போன்று அந்த
எரிமலையில் இருந்து வாயுக்களும் நீராவியும் வெளியேறிய பிறகு, எரிமலையின் உயரம்
மறுபடியும் இறங்கும் பொழுது, எரிமலையுடன் வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது, மறுபடியும் தாழ்வடைகிறது.
இவ்வாறு எரிமலையைச்
சுற்றியுள்ள தரைப் பகுதியானது, உயர்ந்து இறங்கும் பொழுது,எரிமலையைச் சுற்றி வடுக்கள்
போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.
இந்த நிலையில் கடந்த 2009
ஆண்டு
இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில
அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில
அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி
உருவாகுவதைப் போலவே, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள
வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப்
பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.
அது மட்டுமல்லாது அந்த
நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அப்பகுதியில் பூமிக்கு அடியில்
இருந்து ரேடான் என்று அழைக்கப் படும் கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு
இருந்ததை, ஒரு நில அதிர்ச்சி ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.
முக்கியமாக ரேடான்
வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப்படும் நிறமற்ற மனமற்ற ஆனால் கதிர்வீச்சுத்
தன்மையுடைய வாயுவாகும்.
எனவே பூமிக்கு அடியில்
எரிமலை வெடித்ததாலேயே இத்தாலி நாட்டில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு
இருப்பது,அப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு,தரைக்கு அடியில் இருந்து
கசிந்த ரேடான் வாயு மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 11.03.2011
அன்று
ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில்
ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி ஏற்பட்டது.
அப்பொழுது ஹோண்சு
தீவில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில
சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது,தரை மட்ட மாறுபாடுகளைப்
பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
அது மட்டுமல்லாது அந்த
நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹோண்சு தீவின் வளி மண்டல
மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் செயற்கைக் கோள்
படங்களில் பதிவாகி இருந்தது.
இதற்கு அப்பகுதியில்
பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக
இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.
குறிப்பாக ரேடான்
வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து
எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால் அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான்
மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது ஒரு
வெப்பம் உமிழும் வினை என்பதால் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக
உயர்ந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருகிக்ன்றனர்.
மேலும் நில அதிர்ச்சி
ஏற்பட்ட பிறகு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது மறுபடியும்
சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில்
எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு
இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 12.01.2010
அன்று
ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி
மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும்
தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளைப்
பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
அது மட்டுமல்லாது அந்த
நில அதிர்சிக்குப் பிறகு ஹைத்தி தீவின் கடற் கரையானது கடல் மட்டத்திற்கு மேலாக
உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல்
தாவரங்கள் வெளியில் தெரிந்தது.
எனவே பூமிக்கு அடியில்
எரிமலை வெடித்து உயர்ந்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும்
ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 26.12.2004
அன்று,இந்தோனேசியாவின்
சுமத்ரா தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி
உருவானது.
அந்த நில அதிர்சிக்குப்
பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது
கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால் அப்பகுதியில்
கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.
இந்த நிலையில் அதே
சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.02.2008 அன்று கடுமையான நில
அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு
தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள
வளையங்கள் உருவாகி இருந்திருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப்
பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில்
எரிமலை வெடித்ததாலேயே தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக
நிரூபனமாகியுள்ளது.
0000000000000000000
பதினொன்று
நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய முரண்பாடான விளக்கங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக