வியாழன், 12 மார்ச், 2015

எரிமலைகள் வெடித்ததால் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது.ஆய்வறிக்கை.

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தவறான விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும், ஏற்பட்டு இருப்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம், தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தில் புளோரிடா மாகாணக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில் சரிந்து செல்லும் பாறைகளில்,ஐம்பது முதல் நூறு மீட்டர் ஆழத்தில்,பளவப் பாறை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

இந்தப் பவளப் பாறை உயிரினங்களானது சூரிய ஒளி புகக் கூடிய,ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயரும் பொழுது இந்த பவளப் பாறை உயிரினங்களானதுசூரிய ஒளியின்றி இறந்து விடும்.அப்பொழுது அதன் உடலால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் புதை படிவங்களாக மாறி விடுகின்றன.

இந்த நிலையில் வெவ்வேறு ஆழத்தில் காணப் பட்ட, பவளப் பாறை புதை படிவங்களை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடல் மட்டமானது,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கால கட்டத்தில்,நானூறு அடி உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கடல் பகுதியிலும் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும்,பவளப் பாறைத் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையிலும், கடல் மட்டமானது 400 அடி வரை தாழ்வாக இருந்து...உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலயில்,வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுக்கு அடியில் மட்கிக் கிடந்த தாவரங்களின் பாகங்கள் மற்றும் இறந்து கிடந்த விலங்கினங்களின் கழிவுகள்,மற்றும் அவைகளின் வயிற்றில் பாதி செரித்த நிலையில் இருந்த உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,கோபன்கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில் ஏற்பட்ட பனிப் பொழிவால், வட துருவப் பகுதியில் பூக்கும் தாவரங்கள் அழிந்ததால்,அவற்றை உண்டு வாழ்ந்த, பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் போன்ற விலங்கினங்கள் அழிந்திருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில், கடல் மட்டமும் 400 அடி வரை உயர்ந்து இருப்பதுடன்.அதே கால கட்டத்தில் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதால்,பனிப் படலங்கள் உருகுவதால்தான் கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது, என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில், பூமிக்கு அடியில் அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், கடலில் இருக்கும் நீரை விட மூன்று மடங்கு அதிகமான நீர், இருப்பதை நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக, நார்த் வெஸ்ட்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவர் பூமிக்கு மேலே இருக்கும் நீரானது, பூமிக்கு உள்ளே இருந்து வந்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு, விண்வெளியில் திரிந்து கொண்டு இருந்த பனிப் பாறைகள்,கோடிக் கணக்கில் பூமியில் விழுந்ததால்தான், பூமியில் கடல் உருவானதாக நம்பப் பட்டது.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள சுடுநீர் ஊற்றுக்களில் இருந்து வெளியான நீரைப் பகுப்பாய்வு செய்த, டாக்டர் யோசித்தா என்ற புவியியல் வல்லுநர் ,அந்த நீரானது பூமியின் மிக ஆழத்தில் உள்ள பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் என்பதை, அதில் உள்ள ஐசொட்டோப்புகளின் அடிப்படையில் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் எண்ணற்ற அளவில் சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டுகளாக சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்த நீரால்தான் கடல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை, நார்வே மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகாங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக  நிரூபணமாகியுள்ளது.

எனவே அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம்.

ஆனால் தற்பொழுது  அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறான விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் புதை படிவங்களுக்கு விளக்கம் கூறும் புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்களால் வட துருவப் பகுதியில், குறிப்பாக அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் வட பகுதிகளில் ,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களுக்கு விளக்கம் கூற இயல வில்லை.

ஏனென்றால் கண்டத் தட்டு நகர்சிக் கருத்தின்படி, அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் வட பகுதிகளானது ,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டதாக புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் தற்பொழுது அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் வட பகுதிகளில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது இருபது செண்டி கிரேடாகஇருக்கிறது.ஆனால் ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பொரிய முப்பது டிகிரி செண்டி கிரேட் தேவை.

எனவே முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்த ஊர்வன வகை விலங்கினமான டைனோசர்கள்,எப்படி துருவப் பகுதிகளில் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிச்சயம் தற்பொழுது பனிப் பிரதேசமாக இருக்கும் துருவப் பகுதிகளில் டைனோசர்கள் போன்ற ஊர்வன வகை விலங்கினங்களால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் ,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருப்பது துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று, பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,  துருவப் பகுதிகளில் ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும், அதே போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், ,தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு,பூமிக்கு அருகில் சென்ற குருங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம். 

இந்த நிலையில் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கு ஆதாரம் இல்லை என்றும்,அதனால் கண்டங்களானது கடல் தரையுடன் சேர்ந்து, தனித் தனியாகக் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறு கண்டங்களானது கடல் தரையுடன் தனித் தனியாக நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில் கடந்த 12-01-2010 அன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியலாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.

நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

கடந்த 12.01.2010 அன்று ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வினோதமான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது ,ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும்,அந்தப் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்( the Caribbean plate moving eastward with respect to the North America plate),அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த, புவியியல் வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

அதாவது,புவியியல் வல்லுனர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடந்து உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.

சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது ,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்த விளக்கம் 'பசிபிக் மாடல்'  என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் கடல் தளத்திற்கு அடியில் இருந்த எரிமலைப் பிளம்புகள் மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைத் துளைத்தால்,கடல் தளத்திற்கு மேலே கரீபியன் தீவுகள்  கூட்டமாக உருவான பிறகு,கரீபியன் தீவுக் கூட்டதிற்கு அடியில் இருந்த கடல் தளமானது ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவனதாகவும்,அதன் பிறகு,கடல் தளத்திற்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, சக்கரம் போன்று சுழன்றதால் ,கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது.

குறிப்பாக எரிமலைத் தீவுகள் கூம்பு வடிவில் இருக்கும்,ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவானது எரிமலைகள் இல்லாத தீவாக இருப்பதுடன், சம தளத் தீவாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் எதிர் புறம், வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த பொழுது, இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியில், கரீபியன் தட்டு என்று வர்ணிக்கப் படும் கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,நுழைந்து விட்டதாகவும்,தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், பிண்டல் மற்றும் பாரட் என சில புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களும் தற்பொழுது பனாமா நிலத் தொடர்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் எப்படி கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

அனால் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பொழுது, பனாமா நிலத் தொடர்பு உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், பனாமா நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து உருவாகி, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போல உருவாகியது என்றும்,அதன் பிறகு பனாமா நிலத் தொடர்பு வழியாக ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்தும்  நடை பெற்றது என்றும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர் ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதே போன்று 1985  ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும் அமோனிட்டிஸ் வகை கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.

இதே போன்று, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை  டைனோசரின், முதுகெலும்பின் புதை படிவங்கள், கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள, சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான, மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர், மேற்கொண்ட அகழ்வாய்வில் இந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதும், அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாகவும்,தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் சாத்தியம் இல்லாத விளக்கம்.

இது போன்ற பல ஆதாரங்கள் மற்றும் கண்டு பிடிப்புகள் மூலம் தற்பொழுது சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்க மறுக்கின்றனர்.

இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் ,வடக்கு தெற்கு திசையை  நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் உருவானதற்கு,கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளமானது ,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு அடியில்,சென்ற பிறகு,வெப்பத்தால் உருகி பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு எரிமலைத் தொடராக உருவாகி இருக்கின்றன என்றும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து இருக்கலாம் என்றும், தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை நோக்கி நகந்து கொண்டு இருக்கிறது என்றும், நம்புகின்றனர்.இந்தக் கருத்து 'அட்லாண்டிக் மாடல்' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் பசிபிக் கடல் பகுதியில், கால பாகாஸ் தீவுக் கூட்டம் இருப்பதைப் போன்று இருப்பதைப் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் எரிமலைப் பிளம்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டம் உருவான பிறகு, அந்த எரிமலைப் பிளம்புகள் மறைந்து இருக்கலாம் என்றும் புவியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.இந்தக் கருத்தை நம்பும் புவியியலாளர்களால் கரீபியன் தீவுக் கூடத்திற்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகின என்பதற்கு விளக்கம் கூற இயலவில்லை.

இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே (in situ model)  உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.  

ஆனால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டம் உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்,பின்னர் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு, விளக்கமும் பதிலும் கூற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே,அமெரிக்க புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, சுற்றி வளைத்து விளக்கம் கூறி, தங்களின் அறியாமையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடு பட்டு இருக்கின்றனர்.

உண்மையில் அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கரீபியன் தீவுக் கடல் பகுதியில், என்ன நடக்கிறது என்று தெரியாது.

உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விக்கு நேரிடையாக விளக்கம் கூறினால் மட்டுமே, ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு உண்டு.

அது வரையிலும் ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

இந்த நிலையில், வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட,நில அதிர்ச்சி வரை பட ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் தனித் தனியாக  நகர்ந்து, அவற்றின் ஓரப்பகுதிகளுக்கு இடையில், உரசல் ஏற்படுவதால்தான் நிலஅதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட, 3,58,214   நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றையும், நாசா அமைப்பினர் தயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படத்தில் ,வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலஅதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை.

இதன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியை, வரையறுக்கப்  படாத எல்லைப் பகுதி-undefined boundary என்று புவியியல் வல்லுனர்கள் வர்ணிக்கின்றனர்.

இவ்வாறு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலஅதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் , வட  அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே  அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம் என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் எரிமலைகளுக்குள் பாறைக் குழம்பு திரண்டு எரிமலையின் உயரம் அதிகரிப்பதாலும்,எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறிய பிறகு எரிமலையின் உயரம் குறைவைதாலும், எரிமலைகளைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கும் பொழுது , எரிமலையைச் சுற்றிலும் வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, இணைய தளங்களில் வெளியிடப் பட்ட தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அலாஸ்காவில் உள்ள ஆக்மோக் எரிமலையில் இருந்து 1945,1958 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கரிய நிறத்தில் பாறைக் குழம்பானது வெளிப்பட்டது.

குறிப்பாக அந்த எரிமலையானது 1992-95 ஆண்டுகளில் 18 சென்டி மீட்டர் உயர்ந்தது.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டில் சீறியதற்கு முன்பு 1995-96 ஆண்டில் 1-2 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.அத்துடன் 1997 சீறியபொழுது 140 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.

அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆண்டுக்கு 5 முதல் 15 சென்டி மீட்டர் வரை மறுபடியும் உயர்ந்து இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.

இந்த நிலையில்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரிய வந்துள்ளது. 

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று, நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

புதன், 4 மார்ச், 2015

என் கண்டு பிடிப்பின் கதை. விஞ்ஞானி.க.பொன்முடி.


சில ஆண்டுகளுக்கு முன்பு நான் நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டு இருந்த பொழுது அதில் வெளியாகி இருந்த ஒரு புகைப் படம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் நின்று கொண்டு இருந்தனர்.கையில் மண் வெட்டும் கரண்டியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.
குறிப்பாக அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் தரையில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்,அவர்கள் நின்று கொண்டு இருக்கும் இடமானது,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு.கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது ஆடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
உடனே எனக்கு அந்த மழை மட்டுமின்றி மலையைச் சுற்றி இருந்த நிலப் பகுதிகளும் கூட கடலுக்கு அடியியில் இருந்தே கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதாகத் தோன்றியது.
ஏனென்றால் ஏற்கனவே நான் பல இடங்களில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிட்க்கப் பட்டு இருப்பதைப் பற்றி படித்திருந்தேன்.
எனவே எனக்கு கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவது பற்றி சந்தேகம்ம் எழுந்தது.
எனவே ஏன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது/என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன்.அது தொடர்பான கட்டுரைகளைப் படித்தேன்.
அப்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு, கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இனைந்து ஒரே கண்டமாக இருந்ததே காரணம் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணமென்றும் விளக்கம் கூறப் படுகிறது.
உதாரணமாக தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு இது போன்ற விளக்கம் கூறப் படுகிறது.
குறிப்பாக  இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெரிய கண்டம் இருந்ததாக நம்பப் படுகிறது.
அதன் பிறகு  பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிளவு பட்டுப் பிரிந்ததாகவும்,அதனால் லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு கண்டங்கள் உருவாகியதாகவும் அதில் லாரேசியாக் கண்டமானது வட பகுதியை நோக்கியும் கோண்டுவானாக் கண்டம் தென் பகுதியை நோக்கியும் நகர்ந்து சென்றதாகவும் நம்பப் படுகிறது.
பின்னர் வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் ,ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த யூரேசியக் கண்டங்கள் உருவகியதாகவும்,அதில் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

இதே போன்று தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால், தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உருவாகி, வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.

இவ்வாறு கண்டங்கள் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதற்கு,கண்டங்களுக்கு இடையில் தொடந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

குறிப்பாக அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் இருகிறது.அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் அதிகமாக எரிமலைகள் இருப்பதுடன், அப்பகுதியில் அடிக்கடி எரிமலை வெடிப்புகளும் எற்படுவது உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து தொடர்ச்சியாக பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

இவ்வாறு கண்டங்களானது கடல் தளத்துடன் நகரும் பொழுது பாறைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

இதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இவ்வாறு கடல் தரையும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் ,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து கடல் தரையையும் கண்டங்களையும் துளைப்பதால் கடல் தரையின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.

ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியாது.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும்,அனாகிம் எரிமலைத் தொடரும்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று வட அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இதில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் வட அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கானரி எரிமலைத் தொடரானது, மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கண்டத் திட்டுப் பகுதி வரை உருவாகி இருக்கிறது.
இதன் படி அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக உள்ளது.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக ,தெற்கு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும், கேமரூன் எரிமலைத் தொடரானது, தென் மேற்கு திசையில் இருந்து, வட கிழக்கு திசையை நோக்கி, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற் பகுதி வரை உருவாகி தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.
இதன் படி அட்லாண்டிக் கடல் தளமும் ஆபிரிக்கக் கண்டமும் தென் மேற்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக உள்ளது.
இதனால் எப்படி ஒரே நேரத்தில் கடல் தளமும் கண்டமும் இரண்டு வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியும்?என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயம் ஒரே நேரத்தில் கடல் தளமும் கண்டமும் இரண்டு வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க சாத்தியம் இல்லை.
எனவே அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலிருந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலமும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று பசிபிக் கடல் தளத்தின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுத் தொடரானது தென் கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி உருவாகி இருப்பதற்கு ,பசிபிக் கடல் தளமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று தவறாக நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் மற்ற எரிமலைத் தீவுத் தொடர்களும், ஹவாய் எரிமலைத் தீவுத் தொடருக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் லைன் எரிமலைத் தீவுத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தீவுத் தொடரும்,ஹவாய் எரிமலைத் தீவுத் தொடருக்கு இணையாக உருவாகி இருக்க வில்லை.
இவ்வாறு கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும், இந்தியாவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளான லட்சத் தீவு மற்றும் தீகோ கார்சிகாத் தீவுத் தொடர்கள் வளைவான பாதையில் உருவாகி இருக்கும் நிலையில்,இந்தியாவுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் கடலடி எரிமலைத் தொடரானது, தொண்ணூறு டிகிரி கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருக்கிறது.

இவ்வாறு இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும், இரண்டு எரிமலைத் தொடர்களும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலமாகவும் கடல் தளமும்  கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.   

குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளத்துடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு கண்டங்களானது கடல் தளத்துடன் நகரும் பொழுது பாறைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இதே போன்று கடலுக்கு அடியில், ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது மேற்பகுதியில் உள்ள பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்வதாகவும் அதனால் சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

குறிப்பாகக் கடல் தளங்களுடன் கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும்,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்வதால், சுனாமி உருவாகுவதகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிதாக கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு உண்மையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தனித் தனியாகக் கடல் தளம் உருவாகி நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் வட மேற்குப் பகுதிக்கும், தென் மேற்குப் பகுதிக்கும்  இடையில்  தொடர்ச்சியாக உரசல் ஏற்பட்டு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214  நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ச்சியாக கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்தே தவிர உண்மையல்ல.

இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது ,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.எனவே எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று பிளேட் டெக்டானிக் தியரியின் படி, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும், பின்னர் தனியாகப் பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.

தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.

பிளேட் டெக்டானிக் தியரியின் படி,கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.

எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இருந்த பிறகு தற்பொழுது இருப்பது போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு விலகி நகர்ந்து இருக்க வேண்டும் என்றால்,இந்த இரண்டு கண்டங்களும் நிச்சயம் ஒரே கடல் தளத்தின் மேல் இருந்தபடி ஒன்றிலிருந்து ஒன்று விலகி நகர்ந்து இருக்க முடியாது.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருந்தால்தான், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி வந்திருக்க முடியும்.

இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்தியக் கடல் தளத்திற்கும், ஆஸ்திரேலியாக் கடல் தளத்திற்கும், இடையில் உரசல் ஏற்பட்டு, இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில், தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு, நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
  
அந்த நாசா அமைப்பினர் வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில், அவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இவ்வாறு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல் தளமானது தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல் ஒரே த்டற்சியாக இருப்பதன் மூலம், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக ஓரிடத்தில் இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதன் அடிப்படையில் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் கண்டத்தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாக கூறப் படும் ஒரு வரை படத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த வரைபடத்தில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியை இரண்டாகப் பிரித்து, தனித் தனியாகக் காட்டாமல்,அப்பகுதியில் சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, அப்பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் வெறும் யூகத்தின் அடிப்படையில்,  இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், 10.01.2005 அன்று  நாசாவின் வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

 பின்னர் அந்த விளக்கத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகவும், அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றியே, வெறும் யூகத்தின் அடிப்படையில் 27.04.2005  அன்று வெளியிட்ட இன்னொருஅறிக்கையில் முன்னுக்குப் பின் முரணான  விளக்கத்தையும் தெரிவித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் மூலம் ,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் அடிப்படை ஆதாரம் இன்றி வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே தெற்காசிய சுனாமிக்கு விளக்கம் தெரிவித்து இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள, கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் நேரிடையான விளக்கத்தைத்  தெரிவிக்க இயலவில்லை.
ஏனென்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களும் பாஞ்சியா என்ற பெருங் கண்டத்தின் பகுதியாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து ,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் நாற்பத்தி ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவாகியது? எங்கே உருவாகியது? என்ற கேள்வி எழுந்தது.
கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால் உருவாகியதாகவும்,பின்னர் அந்தத் தீவுக் கூட்டமே ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி வளைவான பாதையில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது எதிர் திசையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தற்பொழுது இருக்கும் பனாமா, ஹோண்டுராஸ், நிகரகுவா, போன்ற நாடுகள் அமைந்து இருக்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதிகள் உருவாகி இருக்க வில்லை என்றும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இடைவெளி இருந்ததாகவும், அந்த இடை வெளிக்குள் கரீபியன் தீவுக் கூட்டமானது நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும் பல ஆண்டுகளாக நம்பப் பட்டது..

இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் பாலம் போன்ற மத்திய அமெரிக்க நிலப் பகுதியில்உள்ள ஹோண்டுராஸ் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் , பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாக நம்புவதற்கு ஆதாரம் இல்லை.

அதே போன்று கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசரின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

எனவே கியூபா தீவானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களில் இருந்து கியூபாவுக்கு டைனோசர்கள் வந்து இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இது போன்ற கண்டு பிடிப்புகளால், பல புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்கத் தயங்குகின்றனர்.

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே எங்காவது உருவாகி அமெரிக்கக் கண்டங்களைப் போலவே மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.அப்படியென்றால் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா?ஏன் நகர வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்தக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.

குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் கிழக்குப் பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி வளைவான பாதையில் எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.

இதற்கு, கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், மேற்கு திசையை நோக்கி  நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும், அட்லாண்டிக் கடல் தளமானது, கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல்தரையைப் பொத்துக் கொண்டு கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறும்  புவியியல் வல்லுனர்களால்,அந்த எரிமலைகள் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு விளக்கம் கூற இயல வில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகியது? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு இன்று வரை ஆதாரபூர்வமாக எந்த ஒரு புவியியல் வல்லுராலும் உறுதியாகக்  கூற இயல வில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, கிழக்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் கருத்தின் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால், அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் அமெரிக்க அரசின் புவியியல் வல்லுனர்கள் இருப்பதால்,நேரடியாகக் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கரீபியன் தீவுக் கூட்டமானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் குயுக்தியான அல்லது மிகவும் தந்திரமான விளக்கத்தை அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே உண்மையில் அமெரிக்கக் அரசின் புவியியல் வல்லுனர்களுக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உணமையில் தெரியாத நிலையிலேயே, வெறும் யூகத்தின் அடிப்படையிலான விளக்கத்தையே தெரிவித்து இருப்பது அவர்களின் அறிக்கை மூலமாக தெளிவாகத் தெரிகிறது.


இனி வரும் அத்தியாயங்கள்

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

துருவப் பகுதிகளில்  டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு நிபுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருபதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டார் தாழ்வாக இருந்திருக்கிறது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமும் உயர்ந்து இருக்கிறது பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦