ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

கடல் மட்ட உயர்வுக்கு காரணம் என்ன நோபல் மடையர்களே!
கடந்த 2007 ஆம் ஆண்டு,மனித செயல் பாடுகளால் ,பூமி வெப்பமடைவதை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டதற்காக,அமெரிக்காவின் துணை அதிபரான அல் கோருக்கும், IPCC என்று அழைக்கப் படும், கால நிலை மாற்றம் குறித்த ,சர்வதேச அமைப்பின்
(Intergovernmental Panel on Climate Change (IPCC) தலைவரான,இந்தியாவைச் சேர்ந்த, டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரி ,அவர்களுக்கும் கூட்டாக ,நோபல் பரிசு வழங்கப் பட்டது.

https://en.wikipedia.org/wiki/2007_Nobel_Peace_Prize

அதாவது,வாகனங்கள் மற்றும் தொழிற் சாலைகள் மூலம் வெளியிடப் படும்,கரிய மில வாயுக்களால்,பூமியின் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்தான்,துருவப் பகுதிகளில்,இருக்கும் பனிப் படலங்கள் உருகுவதாகவும்,அவ்வாறு உருகும் பனியானது,கடலில் கலப்பதாலேயே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,நம்பப் படுகிறது.

குறிப்பாகக் கடல் மட்டமானது,ஆண்டுக்கு,0.27 மில்லி மீட்டர், உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், IPCC என்று அழைக்கப் படும், கால நிலை மாற்றம் குறித்த ,சர்வதேச அமைப்பு தெரிவித்து இருந்தது.

உண்மையில் இது போன்ற கருத்துக்கள் எல்லாம் பரிசோதனை மூலமாக நிரூபிக்கப் படாத, கால நிலை மாதிரி (climate model) என்று அழைக்கப் படும் மாதிரிக் கருத்துக்கள் மட்டுமே.

இவ்வாறு, பரிசோதனை மூலம் நிரூபிக்கப் படாத நிலையில்,வெறும் நம்பிக்கை அடிப்படையிலான ஒரு கருத்துக்கு,நோபல் பரிசு வழங்கப் பட்டதற்கு,அறிவியலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு,அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கும் பனிப் படலங்களின் உயரம் அதிகரித்துக் கொண்டு இருப்பது,
பனி இயல் வல்லுனரான,டாக்டர்,ஜே,ஜெவாளி,அவர்கள் தலைமையிலான குழுவினர், செயற்கைக் கோள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும்,எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல என்றும்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு வேறு எதோ காரணம் இருக்கலாம் என்றும், நாசாவின் வலைப் பக்கத்தில், தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

“The good news is that Antarctica is not currently contributing to sea level rise, but is taking 0.23 millimeters per year away,” Zwally said. “But this is also bad news. If the 0.27 millimeters per year of sea level rise attributed to Antarctica in the IPCC report is not really coming from Antarctica, there must be some other contribution to sea level rise that is not accounted for.”

https://www.nasa.gov/feature/goddard/nasa-study-mass-gains-of-antarctic-ice-sheet-greater-than-losses

ஆனால், இன்று வரை அந்த அறிக்கை குறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்க வில்லை.

இதன் மூலம் ,நோபல் பரிசு ,தகுதியற்றவர்களுக்கு,வழங்கப் பட்டு இருப்பது தெளிவாகிறது.

நீங்கள் நோபல் பரிசை அவமதிப்பதன் மூலம் உண்மையாக அறிவியல் ஆராய்ச்சியில் ஈடு படும் விஞ்ஞானிகளையும் அவமதிக்கிறீர்கள்.

இது போன்ற செயல்களால் உண்மையான அறிவியல் வளராமல்,போலி அறிவியலாளர்கள் வளர்வார்கள்.

அது அறிவியல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, மனித குலத்தின் வளர்ச்சிக்கும் தடையாக அமையும்.

ஆனால், உண்மை ஒரு நாள் வெளிப் பட்டே தீரும் என்பதே இந்த நிகழ்வு மூலம் நிரூபணமாகி இருக்கிறது.


00000
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால், துருவப் பகுதிகளில் இன்றும் கூட பனி உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

துருவப் பகுதிகளில் இருக்கும் பனி உருகுவதற்கு பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்றால்,அதே துருவப் பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது.

குறிப்பாக,உலகில் உள்ள பனிக் கட்டிகளின்,தொண்ணூறு சதவீதப் பனியானது,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கிறது.

இந்த நிலையில்,செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அண்டார்க்டிக் கண்டத்தின் பனிப் படலங்களின் உயரம் அதிகரித்துக் கொண்டு இருப்பது ,நாசா விஞ்ஞானி டாக்டர் ஜே ஜேவாளி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில்,அண்டார்க்டிக் கண்டத்தில் ,உருகும் பனியை விட,பனிப் பொழிவால் உருவாகும் பனியானது,அதிகமாக இருப்பதாகவும்,எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக் கண்டத்தில் ,இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது தவறான விளக்கம் என்று,டாக்டர் ஜே ஜேவாளி, தெரிவித்து இருக்கிறார்.

எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறதா?

அதற்கு முன்பு,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.

ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர்.

அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன ?

தற்பொழுது பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் பட்டாலும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம்,கடந்த காலத்தில்,கடல் மட்ட உயர்வும்,பனிப் பொழிவும்,ஒரே கால கட்டத்தில்,நடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாகக் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டம் உயர்ந்து இருப்பதுடன் ,அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக,அமெரிக்காவில்,புளோரிடா மாகாணக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில்,நானூறு அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,பவளப் பாறைத் திட்டுகளின் தொன்மையை ஆய்வு செய்தனர்.

அக்ரோ போரா பால்மேட்டா என்று அழைக்கப் ப்படும்,அந்தப் பவள உயிரினங்களானது,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில்,வளரக் கூடியது.

எனவே, கடல் மட்டம் உயர்ந்தால்,அந்தப் பவள உயிரினங்கள் இறந்து விடும்.அப்பொழுது,அந்தப் பவளங்களால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருள்களானது திட்டுகளாகப் படிந்து விடும்.

அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையை ,அமெரிக்க நாட்டுப் புவியியல் வல்லுனர்கள்,ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையிள்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டதில்,கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததால்,அந்தப் பவள உயிரினங்களானது,இறந்து படிவங்களாக உருவாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று,வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில்,இறந்து மட்கிக் கைக்கும்,தாவாரங்களின் பாகங்கள்,மகரந்தத் துகள்கள்,மற்றும் இறந்த விலங்கினங்களின் உடல் பாகங்கள்,அத்துடன், அந்த விலங்குகளின் வயிற்றில் இருந்த செரிக்காத உணவுப் பொருட்கள்,மற்றும்,விலங்கினங்களின் கழிவுகள்,ஆகியவற்றை ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர்,எஸ்கி வில்லெர்ஸ்லெவ் தலைமியிலான குழுவினர்,சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் அதிக அளவில் இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த பனி யானைகள் அந்த தாவரங்களை உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளானது, சத்துக் குறைவான புற்களை உண்டு வாழ்ந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதன் பிறகு ,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததாகவும்,பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்கள் அருகி விட்டதாகவும்,அதனால் சத்துக் குறைவான தாவரங்களை உண்ட பனி யானை இனமானது அழிந்து விட்டதாகவும்,அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டமானது, உயர்ந்து இருப்பதுடன்,அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே ,கடல் மட்டம் உயர்வதற்குப் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ,தவறான விளக்கம் என்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே, உண்மையில் கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.

சமீபத்தில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,பூமிக்கு அடியில்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,பூமிக்கு மேலே இருக்கும் நீரை விட,மூன்று மடங்கு அதிக அளவு நீரானது,பூமிக்கு அடியில்,அறுநூறு கிலோ மீட்டர் ஆழத்தில்,இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

குறிப்பாக, அந்த நீரானது,ரிங்க்வூ டைட் என்று அழைக்கப் படும் பாறைப் படிக வடிவில் இருப்பதாகக் கண்டு பிடித்து இருக்கிறார்.

இதன் அடிப்படையில் அவர்,பூமிக்கு மேலே இருக்கும் நீரானது,பூமிக்கு அடியில் இருந்தே வந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு,பூமியில் இருக்கும் கடல் நீரானது,பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த, லட்சக் கணக்கான விண் பாறைகளில் இருந்த நீரால் உருவானது, என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில்,ஜப்பானில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த நீரை,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்.ஒரு பாட்டிலில் சேகரித்து ஆய்வு செய்தார்.

அப்பொழுது,அந்த நீரானது,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது,அதில் இருந்து பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.

இதே போன்று,கடலுக்கு அடியில் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.

எனவே, கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கோடிக் கணக்கான ஆண்டு காலமாக,பூமிக்கு அடியில் இருந்து சுரந்த நீரால்தான், கடல் உருவாகி இருப்பதுடன்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும் காரணமாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் கூட நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

அந்த நீர் கூட,நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பரியான பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் ஆகும்.

முக்கியமாக,பூமியின் எடையில் எண்பது சதவீதம் மாக்மா என்று அழைக்கப் படும் பாறைக் குழம்பால் ஆனது.

அந்தப் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீரே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் தொடர்ந்து கலந்து கொண்டு இருக்கிறது.

இது போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெறுகிறது.

எனவே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,பூமிக்குள் இருந்து சுரக்கும் நீரானது,தொடர்ந்து கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

முக்கியமாக,பூமியில் இருக்கும் பனி மொத்தமும் உருகினால் கூட,கடல் மட்டமானது அதிக பட்சம்,240 அடி வரைதான் உயரும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.

அப்படி கடல் மட்டமனது, 240 அடி உயர்ந்தால்,மூழ்கும்,கண்டங்களின் ஓரப் பகுதிகளுடன்,சில தீவுகள் மட்டுமே மூழ்கும்.

ஆனால் ,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,பூமிக்கு அடியில் இருந்து உற்பத்தி ஆகும்,பாறைக் குழம்பு நீர் ஆகும்.

இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,மடகாஸ்கர் தீவில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியில் உருவான,குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த விலங்கால்,கடலின் மேற்பரப்பில் நீந்தவோ மிதக்கவோ இயலாது.

ஆனால்,மடகாஸ்கர் தீவோ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.

எனவே,குள்ள வகை நீர் யானைகலானது,ஆப்பிரிக்கக் கண்டதிலிருந்து,தரைவழித் தொடர்பு மூலமாகவே,மடகாஸ்கர் தீவுப் பகுதியை அடைந்து இருக்க முடியும்,

எனவே,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து,சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கிறது.

புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளில்,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது உறுதியாகிறது.

எனவே,இன்னும்,ஒரு கோடி ஆண்டு காலத்தில்,கடல் மட்டமானது, ஒரு கிலோ மீட்டர்
(3280) ,உயர்ந்தால், கடல் மட்டத்தில் இருந்து ,சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கும்,கண்டங்கள் எல்லாம்,அதாவது ஏழு கண்டங்களும்,கடலுக்கு அடியில்,மூழ்கி விடும்.


0000
கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

நீர் யானை இனமானது,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம் ஆகும்.

நீர் யானைகளால், நீர்ப் பரப்பின் மேல், நீந்தவோ மிதக்கவோ இயலாது.

குள்ள வகை நீர் யானை இனமானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று இன வகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக,ஆப்பிரிக்கக் கண்டமும்,மடகாஸ்கர் தீவும்,இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து குள்ள வகை நீர் யானைகள் எப்படி,மடகாஸ்கர் தீவுக்கு வந்தன என்பது புதிராக இருக்கிறது.

ஒரு வேளை,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு ,நீர் யானைகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்பதற்கும் வாய்ப்பில்லை.

ஏனென்றால்,மடகாஸ்கர் தீவில்,கண்டு பிடிக்கப் பட்ட மூன்று இன வகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மூன்று இன வகையைச் சேர்ந்த ,பெரிய அளவு நீர் யானைகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த விளங்கினமாகும்.

எனவே,மடகாஸ்கர் தீவுக்கு,மூன்று முறை ,நீர் யானைகள் ,தற்செயலாகக் கடல் வழியாக, வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

As hippos are semi-aquatic, it is possible that they survived the 400 km (248 mi) trek across the channel, although presumably when the water was shallower and there were perhaps small islands along the way. It is possible that the three species of hippopotamus represent three distinct and successful colonizations of the island.
https://en.wikipedia.org/wiki/Malagasy_hippopotamus

ஆனால், இந்த விளக்கமானது, அசாதாரணமான விளக்கம் ஆகும்.

அதாவது,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு ,ஒரே ஒரு கர்ப்பிணி நீர் யானையானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு,இரண்டு குட்டிகளை ஈன்ற பிறகு,அந்தக் குட்டிகள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து, மடகாஸ்கர் தீவில்,அந்த இனம் பெருகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

ஆனால்,நீர் யானைகளானது, வழக்கமாக ஒரே ஒரு குட்டிகளையே ஈனக் கூடியது.

A mother typically gives birth to only one calf, although twins also occur.
https://en.wikipedia.org/wiki/Hippopotamus

மிகவும் அரிதாக நீர் யானைகள் இரண்டு குட்டிகளை ஈனக் கூடியது.

எனவே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மூன்று இன வகையைச் சேர்ந்த நீர் யானைகளானது,மூன்று முறையும் தற்செயலாக,மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு,மூன்று முறையும்,வழக்கத்துக்கு மாறாக,இரண்டு குட்டிகளை ஈன்றதால்,மடகாஸ்கர் தீவில், மூன்று இனவகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புகள் காணப் படுகிறது, என்ற விளக்கமானது, இயற்க்கைக்கு முரணான விளக்கம் ஆகும்.

இதே போன்று,மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும்,சிசிலி,மால்டா,கிரிட்டி,மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளிலும்,நான்கு வகையான ,குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்து இருப்பது,அந்தத் தீவுகளில்,கண்டு பிடிக்கப் பட்ட,எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, அந்தக் குள்ள வகை நீர் யானைகளானது,ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து ,பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினங்கள் ஆகும்.

Several species of small hippopotamids have also become extinct in the Mediterranean in the late Pleistocene or early Holocene. Though these species are sometimes known as "pygmy hippopotami" they are not believed to be closely related to C. liberiensis. These include the Cretan dwarf hippopotamus (Hippopotamus creutzburgi), the Sicilian hippopotamus (Hippopotamus pentlandi), the Maltese hippopotamus (Hippopotamus melitensis) and the Cyprus dwarf hippopotamus (Hippopotamus minor).[20]

These species, though comparable in size to the pygmy hippopotamus, are considered dwarf hippopotamuses, rather than pygmies. They are likely descended from a full-sized species of European hippopotamus, and reached their small size through the evolutionary process of insular dwarfism which is common on islands; the ancestors of pygmy hippopotami were also small and thus there was never a dwarfing process.[20] There were also several species of pygmy hippo on the island of Madagascar (see Malagasy hippopotamus).

https://en.wikipedia.org/wiki/Pygmy_hippopotamus

எனவே, மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறை,மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நான்கு முறை,என ஏழு முறையும் ,தற்செயலாக மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, நீர் யானையானது,தீவுகளை ,அடைந்து இருக்க இயலாது.

அதன் பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈன்று,அந்தத் தீவுகளில்,குள்ள வகை நீர் யானை இனம் பெருகி இருக்க வாய்ப்பில்லை.

எனவே,மடகாஸ்கர் தீவு மற்றும் மத்திய தரைக் கடல் தீவுகளில்,காணப் படும், குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைப் படிவங்கள் ,மூலம்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும்,அதனால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக,விலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.


00000
கேள்விக் குறியான கண்டத் தட்டுக் கருத்து.

தற்பொழுது ,அண்டார்க்டிக்கா,ஆஸ்திரேலியா, போன்ற தீவுக் கண்டங்களில்,கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த விளக்கத்தை முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார்.

ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.

அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்க வில்லை.

அவர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதை கவனித்தார்.

அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும்,பின்னர்,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நம்பினார்.

ஆனால், அவரின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.

மாறாகக் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.

இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பப்னிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுயருப்பதை வெக்னர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில்,வெக்னர்,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு,வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.

வெக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.

உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.

அதன் பிறகு,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.

அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.

அதே போன்று,தென் பகுதிக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.

அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.

அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால்,கடல் தரையைப் பிளந்து கொண்டு,கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான, தடயங்கள் எதுவும்,கடல் தரையில், காணப் படவில்லை.

இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையில்,பணியாற்றிய புவியியல் பேராசிரியரான,டாக்டர்,ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல் பயணங்களுக்குப் பயன் படுத்துவதற்காக ,கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.

அப்பொழுது,கண்டங்களுக்கு இடையில்,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர்,நீளத்துக்கு,கடலடி எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.

அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில்,இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி,விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.

இந்த விளக்கமானது ‘’கண்டத் தட்டு நகர்ச்சி’’ ( plate tectonic theory ) என்று அழைக்கப் படுகிறது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத்தில் குறிப்பாக மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் அரிசோனா பாலைவனப் பகுதியில், இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மரங்களின் கற்படிவங்கள் மற்றும் சதுப்பு நிலப் பகுதியில் வாழக் கூடிய முதலைகளின் புதை படிவங்களும் காணப் படுவதற்கு,இருபத்தியொரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அரிசோனா நிலப் பகுதியானது, அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,குறிப்பாக இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கில், அதாவது தற்பொழுது கரீபியன் தீவு அமைந்து இருக்கும் பகுதியில் இருந்ததாகவும் ,பின்னர் வட பகுதியை நோக்கி வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்ததால், அரிசோனா நிலப் பகுதியானது தற்பொழுது உள்ள மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காராணம் என்று விளக்கம் கூறப் படுகிறது.

இந்த விளக்கத்தின் படி வட அமெரிக்கக் கண்டத்தின் வடகோடிப் பகுதிகள், கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கிறது.

அறிவியல் உலகில் விடை கூறப் படாத கேள்வி!

இந்த நிலையில், வட அமெரிக்காவின் வடக்கில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியில் உள்ள, கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த டைனோசர்களின் எலும்புப் புபுதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஆனால், டைனோசர்களானது முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் ஊர்வன வகை விலங்கினம் என்பதால், ஆர்க்டிக் பகுதியில் எப்படி டைனோசர்கள் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி தற்பொழுது அறிவியல் உலகில் விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.

ஏனென்றால்,கண்டத் தட்டுக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட பகுதியான,அலாஸ்காவின் வட பகுதியான,நார்த் ஸ்லோப் என்று அழைக்கப் படும் பகுதியும்,அதே போன்று,ஆசியக் கண்டத்தின்,வட பகுதியான,சைபீரியாவின் வட பகுதியில், இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியும்,கடந்த ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள்,நகர்ந்து வந்து விட்டது.

இது போன்ற சூழலில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது.

ஏனென்றால்,ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பிரதேசத்தில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது,பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.இந்த நிலையில்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருக்கும்,சைபீரியாவின் வட பகுதியில், இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியில் ,டைனோசர்களின் முட்டைகளின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில், பூமத்திய ரேகைப் பகுதியில் இருப்பதைப் போன்ற,வெப்பமான சூழல் இருந்திருக்கிறது.

அதே போன்று,டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில், பனிப் படலங்களுக்குப் பதிலாக, பூமத்திய ரேகைப் பகுதியில் இருப்பதைப் போன்ற, பசுமைக் காடுகளும் இருந்திருக்கின்றன.

இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து,ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஏனென்றால்,தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் ,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகள் எல்லாம்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததே காரணம் என்றும்,அதன் பிறகு,அந்த நிலப் பகுதிகலானது,மெதுவாக நகர்ந்து,ஆர்க்டிக் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, டைனோசர்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.

ஊர்வன வகை விலங்கினங்களால்,மற்ற பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று,சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.

அதன் காரணமாகவே,பாம்பு,முதலை,ஆமை போன்ற ஊர்வன வகைப் பிராநிகலானது,பனிப் பிரதேசத்தைத் தவிர்த்து,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதிகளிலேயே காணப் படுகிறது.
எனவே,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு வேளை டைனோசர்கள்,பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணிகளாக இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,ஆண்டுக்கு நான்கு மாதங்கள் ,ஆர்க்டிக் பகுதியில்,தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆண்டுக்கு நான்கு மாதங்கள்,தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால்,தாவர வகைகளால்,சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.

ஆனால், டைனோசர்கள் யானையை விட நான்கு மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது,அதே போன்று டைனோசர்களும்,யானைகளைப் போலவே,கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.

எனவே,ஏழு கோடி ஆண்டுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் கூட்டம்,எதைத் தின்று உயிர் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,இறந்த தாவரங்களின் பாகங்களை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்புகின்றனர்.

ஆனால், ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு முப்பது முதல்,முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

ஆனால்,தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரியாக இருக்கிறது.

இந்த நிலையில்,ஆராய்ச்சியாளர்கள்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில்,மூன்று டிகிரியாக இருந்திருக்கிறது, என்று கணித்து இருக்கின்றனர்.

எனவே, ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது,பனிக் காலத்தில்,தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,என்று கருதினார்கள்.

இவ்வாறு, குறைந்த அட்ச ரேகைப் பகுதியில்,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்த பிறகு,மறுபடியும்,உயர்ந்த அட்ச ரேகைப் பகுதிக்கு,இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில்,தற்பொழுது,டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.

குறிப்பாக,டைனோசர்களின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்பது குறித்து அறியப் படாமல் இருந்தது.

இந்த நிலையில்,அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகளானது ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகளைப் போலவே,பொரிவதற்கு, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு,டைனோசர்களின் புதை படிவங்கள் ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,டைனோசர்களானது,பறவைகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றும்,பறவைகளைப் போலவே,டைனோசர்களின் முட்டைகளும்,பதினோரு நாட்கள் முதல்,எண்பத்தி ஐந்து நாட்களில் பொரிந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.

இந்த நிலையில்,எரிக்சன், ,டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்குள் இருந்த,டைனோசர்களின் கருக்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்த வளர்ச்சி வளையங்களைக் கணக்கிட்டதன் அடிப்படையில்,அந்தக் கருக்களானது எத்தனை மாதக் கரு என்பதை அறிந்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்,அவர்,சிறிய வகை டைனோசர்களின் முட்டைகள் மூன்று மாத அளவிலும்,பெரிய வகை டைனோசர்களின் முட்டைகளானது, ஆறு மாத கால அளவிலும் பொரிந்து இருக்கின்றன, என்று தெரிவித்து இருக்கின்றார்.

குறிப்பாக சிறிய வகை டைனோசர்கள் கூட பருவ வயதை அடைய ஓராண்டு காலம் ஆகும் என்பதால் பெரிய வகை டைனோசர்கள்,பெரிதாக இன்னும் அதிக காலம் ஆகும்.

எனவே,டைனோசர்களானது,தங்களின் முட்டைகளை இட்ட பிறகு,அந்த முட்டைகளானது பொரியும் காலம் வரை, அதாவது ஆறு மாதகாலம்,அதன் முட்டைகளை,மற்ற விலங்கினங்களிடம் இருந்து பாது காக்க வேண்டும்.

அதன் பிறகும்,அதன் குஞ்சுகள் பெரிதாக இன்னும் ஓராண்டு காலம் ஆகும்.

எனவே சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதிக்கும்,குறைந்த அட்ச ரேகைப் பகுதிக்கும்,கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில்,டைனோசர்கள் ஆர்க்டிக் பகுதியிலேயே ஆண்டு முழுவதும் குடியிருந்து குடும்பமும் நடத்தி இருக்கிறது என்ற முடிவுக்கும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.
எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மாயோ சாரஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் முட்டைகளானது,பறவைகளின் கூட்டில் இருப்பதைப் போன்று,வரிசையாக அடுக்கப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,அந்த டைனோசர்,பறவைகளைப் போன்று அடை காத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
அது போன்ற டைனோசர்கள் முட்டைகளை அடை காக்கும் சாத்தியம் இல்லை.

எனவே,டைனோசர்களின் முட்டைகள் ஆர்க்டிக் பகுதியில்,பொரிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆர்க்டிக் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.

எனவே,டைனோசர்களின் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில்,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருப்பதைப் போன்றே அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.

எனவே, பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது.அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததாகவும்,அதன் பிறகு,பனிப் பிரதேசங்களுக்கு நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.

அதே போன்று, பனிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கம் தவறு.
உண்மையில்,பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்வாழ்ந்த காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்ததே காரணம் என்பது ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.-








சனி, 26 ஆகஸ்ட், 2017

பூமிப் பந்தின் புதிர்களை விடுவித்தல்.






கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும்,காணப் படுவதுடன்,கடல் மட்டத்தில் இருந்து,இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையிலும்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்கள்,கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில், டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
அதே போன்று,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில், வாழக் கூடிய,முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய, டைனோசர்களின் புதை படிவங்களானது,தற்பொழுது,வட துருவப் பகுதியிலும், அதே போன்று,தென் துருவப் பனித் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்திலும்,பனிப் படலங்களுக்கு அடியில்,கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையிலும்,டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமானது தாழ்வாக இருந்திருப்பதுடன்,கடலின் பரப்பளவும்  குறைவாக இருந்திருப்பதுடன், பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருப்பதும்,துருவப் பகுதிகளில், பனிப் படலங்களுக்குப் பதில்,பசுமைக் காடுகள் இருந்திருப்பதும்,அதன் பிறகு,பூமிக்குள் இருந்து சுரந்த நீரால்,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர்,உயர்ந்து இருப்பதும்,அதனால் துருவப் பகுதிகளில்,பனிப் படலங்கள்  உருவாகி இருப்பதும்,தெரிய வந்துள்ளது.

அத்துடன்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது,பிரியும் நீரால் கடல் மட்டம்  உயர்ந்து கொண்டு இருப்பதும்,அதனால் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதுடன்,பூமிக்கு அடியில்,பெரும் பகுதியாகப் பாறைக் குழம்பு இருப்பதால்,கடல் மட்டமானது,தொடர்ந்து உயர்ந்து,மலைகள் உள்பட ஏழு கண்டங்களையும் மூழ்கடிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

சூரிய மண்டலத்தின் புதிர்களை விடுவித்தல்.








சூரிய மண்டலத்தின் புதிர்ககள்.

தற்பொழுது இணையத்தில் வெளியிடப்  பட்ட,பல்வேறு ஆய்வுத் தகவல்கள் மூலம்,கிரகங்களின் தோற்றம் குறித்த கருத்துக்கள் கேள்விக் குறியாகி இருக்கின்றன.
குறிப்பாக,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
அதே போன்று,நிலவானது,பூமியைச் சூரியன் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கமும், கேள்விக் குறியாகி இருக்கிறது.
அதே போன்று,கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில்,சாய்வான கோணத்தில்,சூரியனை வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கமும், கேள்விக் குறியாகி இருக்கிறது.
குறிப்பாக,புதன் கிரகமானது,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் பட்ட விளக்கமும், கேள்விக் குறியாகி இருக்கிறது.
இந்தக் கேள்விகளுக்கு விடை கூறுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
000000000000000000000000000000


அதிக வெப்பத்தில் உருவாகக் கூடிய பாறைகள்,வால் நட்சத்திரங்களில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது,விண் வெளியில்,இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், சுருங்கியதால்,நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தானது நெபுலா கொள்கைஎன்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தை முதன் முதலாக கூறியவர்,ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் ஸ்வீடன் பர்க். அதன் பிறகு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கான்ட் 1755 ஆம் ஆண்டு இந்தக் கருத்தை விரிவாக்கினார்.

இந்தக் கருத்தின் படி, விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத விண்மேகங்களானது, தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தோசை போன்ற தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்த நிகழ்வின் பொழுது, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,ஒரு கோடி ஆண்டு காலகட்டத்தில், பூமி செவ்வாய் போன்ற, சிறிய அளவிலான பாறைக் கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது.

அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின், மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது.
அதன் பின்னர்,சூரியனுக்குத் தொலைவில் இருந்த தூசிகள் திரண்டதால், முதலில் பாறைக் கிரகங்களாக உருவான பிறகு,அந்தப் பாறைக் கிரகங்களானது,அந்தப் பகுதியில் இருந்த வாயுக்களைக் கவர்ந்ததால், வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது.
பாறைக் கிரகங்களுக்கும்,ராட்சத வாயுக் கோளக் கிரகங்களுக்கும் இடையில் இருந்தபடி,குறிப்பாக செவ்வாய்க் கிரகத்துக்கும்,வியாழன் கிரகத்துக்கும், இடையில் இருக்கும் பகுதியில்,அதாவது விண்பாறைகள் இருக்கும் பகுதியானது,நீர் பனியாக உறையும் பகுதி என்று கருதப் படுகிறது.
அதே போன்று,நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால், மிகவும் குறைந்த வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால், மீத்தேன், அம்மோனியா, நைட்ரஜன்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய,வாயுக்கள் உறையும் பகுதி எனக் கருதப் படுகிறது
குறிப்பாக, நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால்,பனி திரண்டு வால் நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் பட்டது.
எனவே வால் நட்சத்திரங்களில்,எளிதில் ஆவியாகக் கூடிய, கார்பன் டை ஆக்சைடு,நீர்,சோடியம் போன்ற பொருட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்த நிலையில்,கடந்த 2004,ஆம் ஆண்டு, நாசாவைச் சேர்ந்த, ஆராய்ச்சியாளர்கள், வைல்ட்-2 , என்ற வால் நட்சத்திரத்தில் இருந்த பொருட்களை,ஸ்டார் டஸ்ட் என்ற செயற்கைக் கோள் மூலம், சேகரித்துப் பூமிக்குக் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்தனர்.

அப்பொழுது, அந்த வால் நட்சத்திரத்தில்,சிலிகேட் படிகப் பாறையான, ஆலிவியன்,அனோர்டைட்,மற்றும்
 டையாப் சைட் ஆகிய பாறைத் துகள்கள் இருப்பதைக் கண்டனர்.

ஆனால்,இவ்வகைப் பாறைப் பொருட்களானது,சூரியனுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு அருகில்,இருக்கும் அதிக வெப்பமான சூழ் நிலையில் உருவாகக் கூடியது.
ஆனால்,தூசித் தட்டுக் கருத்தின் படி,வால் நட்சத்திரங்கள் எல்லாம்,நெப்டியூன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் குளிர்ந்த பகுதியில் உருவாகக் கூடியது என்று நம்பப் பட்டதற்கு முற்றிலும் முரணாக,வைல்ட் வால் நட்சத்திரத்தில்,சூரியனுக்கு அருகில்,இருக்கும் அதீத வெப்ப நிலையில் உருவாகக் கூடிய பாறைப் பொருட்கள் இருப்பது,சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்த தூசித் தட்டுக் கருத்தை கேள்விக் குறியாகி விட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அந்த வால் நட்சத்திரத் துகள்களில்,நீரின் உதவியுடன் உருவாகும்,இரும்பு மற்றும் காப்பர் சல்பேட் ,இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

எனவே,கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் தோற்றம் பற்றிய, தூசித் தட்டுக் கருத்தானது, ஒரு தவறான கருத்து என்பது,வால் நட்சத்திரங்களில் கண்டு பிடிக்கப் பட்ட பொருட்கள் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று,எளிதில் ஆவியாகக் கூடிய, மீத்தேன்,நைட்ரஜன்,குளோரின் போன்ற வாயுக்கள் மற்றும் நீரானது,சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களில்,காணப் படுவதன் அடிப்படையில்,சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் தவறு என்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாகத் தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரியன் உருவான காலத்தில், சூரியனுக்கு அருகில் இருந்த அதீத வெப்பத்தால்,எளிதில் ஆவியாகக் கூடிய,மீத்தேன்,நைட்ரஜன்,குளோரின் போன்ற வாயுக்கள் எல்லாம்,செவ்வாய் கிரகத்துக்கும் அப்பால் இருந்த படி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்கள் இருக்கும் பகுதிக்குக் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு,அமெரிக்க நாட்டின் நியூ ஹாரிசன் விண்வெளிக் கலனானது,புளூட்டோவைக் கடந்து சென்ற பொழுது,சூரியனின் கதிர் வீச்சின் காரணமாகப் புளூட்டோவில் இருந்து,நைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.
புளூட்டோவானது,சூரியனில் இருந்து, பூமி இருக்கும் தொலைவைக் காட்டிலும்,முப்பது மடங்கு தொலைவில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
எனவே,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் புளூட்டோவில் இருந்து, சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, நைட்ரஜன் வாயு வெளியேறிக் கொண்டு இருக்கும் நிலையில், சூரியன் உருவாகிய காலத்தில்,சூரியனுக்கு அருகில் நைட்ரஜன் இருந்திருக்க சாத்தியம் இல்லை.
எனவே, பூமி உள்பட, சூரியனுக்கு அருகில் இருக்கும்,கிரகங்களில்,எளிதில் ஆவியாகக் கூடிய நைட்ரஜன் வாயுவுடன் ஒரு கிரகம் உருவாக சாத்தியம் இல்லை.
ஆனால்,சூரியனுக்கு அருகில் இருக்கும், பூமியின் வளி மண்டலத்தில், எழுபத்தி எட்டு சதவீதம்,அதாவது முக்கால் பங்குக்கும் அதிக அளவில்,, நைட்ரஜன் இருக்கிறது.
இவ்வாறு, பூமியில் நைட்ரஜன் வாயு இருப்பதற்கு,ஒரு வேளை,பூமிக்கு வால் நட்சத்திரங்கள் மூலம்,நைட்ரஜன் வாயு வந்து இருக்கலாம் என்றும் கூட, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று,பூமியில் இருக்கும் குளோரின்,மீத்தேன் போன்ற வாயுக்களும் கூட, வால் நட்சத்திரங்கள் மூலம், வந்து இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால், பூமியை விட,அதிக தொலைவில் இருந்தபடி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,செவ்வாய் கிரகத்துக்கு அருகில் வந்த, சைடிங் ஸ்ப்ரிங் ,வால் நட்சத்திரத்தில் இருந்து,எளிதில் ஆவியாகக் கூடிய சோடியம்,உள்பட, மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும், துத்தநாகம் போன்ற தனிமங்கள், வெளியேறி இருப்பதும் செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக,அமெரிக்கா ,மாவென் என்ற செயற்கைக் கோளை ஏவியது.

அந்த செயற்கைக் கோளானது, செவ்வாய் கிரகத்தை அடைந்த நேரம்,சைடிங் ஸ்ப்ரிங் என்ற வால் நட்சத்திரமானது,செவ்வாய்க் கிரகத்தை மிக நெருக்கமாகக் கடந்து சென்றது.

அதனால், அந்த வால் நட்சத்திரத்தின் வாலில் இருந்த தூசிப் பொருட்களானது, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் விழுந்தது.
 

அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பை, செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்த பொழுது, ,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று,செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும்,கண்டு பிடிக்கப் பட்டது.
சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு அருகில்,சென்ற வால் நட்சத்திரத்தில் இருந்த உலோக வாயுக்களானது,சூரியக் கதிரால் ஆவியாகி இருக்கும் நிலையில்,செவ்வாய் கிரகத்தை விட, சூரியனில் இருந்து, குறைந்த தொலைவில்,இருக்கும் இடத்தில், அந்த வாயுக்களானது,ஆவியாகாமல் இருந்திருக்க சாத்தியம் இல்லை.

எனவே,சூரியன் உருவாகும் பொழுது,சூரியனுக்கு அருகில் இருந்த அதிகப் படியான வெப்பத்தால்,சூரியனுக்கு அருகில்,இருந்த தூசி மற்றும் வாயு மண்டலத்தில்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல், குரோமியம்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன், போன்ற வாயுக்கள் நீண்ட காலமாக இருந்திருக்க சாத்தியம் இல்லை.
ஆனால்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல், குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்கள்,பூமியில் ஏராளமாகக் காணப் படுகின்றன.
இவ்வாறு,பூமிக்கு அடுத்தபடியாக இருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தில் இருந்து,சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, ஆவியாகக் கூடிய, சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல், குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்களானது,செவ்வாய் கிரகத்தை விட, சூரியனுக்கு அருகில் இருக்கும், பூமியில் காணப் படுவதன் மூலமாகவும், சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்த விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதே போன்று, நிலவில் இருந்தும், சூரியக் கதிர் வீச்சின் காரணமாக,  சோடியம் வாயு வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில், கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில்,சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகமான,புதன் கிரகத்தில் இருந்தும்,சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, சோடியம் வாயு, வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே,புதன் கிரகமானது, எப்படி சூரியனுக்கு அருகில்,சோடியம் வாயுவுடன் உருவானது,என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாகச் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர் வீச்சின் காரணமாக, சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன்,வெள்ளி,பூமி,மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களில் இருந்து, ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்கள் வெளிப்பட்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதே போன்று, சூரியனை நோக்கி வரும் வால் நட்சத்திரங்களில்,குறிப்பாக  அந்த வால் நட்சத்திரங்களானது,செவ்வாய் கிரகம் இருக்கும் தொலைவை நெருங்கும் பொழுதே,அந்த வால் நட்சத்திரங்களில் இருந்து, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைட் வாயுக்களானது.சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, வெளியேற்றப் படுவதும்,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன்,சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

குறிப்பாக, சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் கிரகங்களில் இருந்து,சூரியனின் கதிர் வீச்சு காரணமாக, வெளியேற்றப் படும் வாயுக்களுடன்,சூரியனுக்கு அருகில் ஒரு கிரகம் உருவாக இயலாது.
எனவே,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி தூசிமண்டம்,சுழன்று கொண்டு  இருந்ததாகவும்,அப்பொழுது அதில் இருந்த,தூசிகளும்,வாயுக்களும் ஆங்கங்கே உருண்டு திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம், என்பது சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களில்,சூரியக் கதிர்வீச்சால் எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் மற்றும் உலோகங்கள் காணப் படுவதன் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் மூலம்,நிலவின் அடிப் பகுதியில், பூமியில் இருக்கும் அளவுக்கு, நீர் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால்,தூசித் தட்டுக் கருத்தின் படி,நிலவிலோ,பூமியிலோ,எளிதில் ஆவியாகக் கூடிய நீர் இருப்பதற்கு சாத்தியம் இல்லை.
ஏனென்றால், முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி தூசிமண்டம்,சுழன்று கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அதில் இருந்த,தூசிகளும்,வாயுக்களும் ஆங்கங்கே உருண்டு திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் இந்த நிகழ்வின் பொழுது, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால் சூரியனுக்கு அருகில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன் போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது.
ஆனால்,நீர் மூலக் கூறானது,ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களால் ஆனது,
எனவே,பூமி மட்டுமின்றி நிலவுக்கும் கூட,நீரானது,சூரியனில் இருந்து அதிக தொலைவில் உருவாகுவதாக நம்பப் படும், வால் நட்சத்திரங்கள் மூலம், வந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.
இந்த நிலையில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அதே போன்று,நிலவில்,எரிமலைச் செயல் பாட்டினால்,நிலவின் அடிப்பகுதியில் இருந்து,நிலவின் மேற்பரப்புக்கு வந்த,பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே,அதிக அளவில் நீரின் மூலக் கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக,அந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளானது,நிலவின் அடிப் பகுதியில் உருவானவைகள் என்பதால்,அதனுள் இருக்கும் நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீராகும்.

அது மட்டுமின்றி இது போன்ற எரிமலைச் செயல் பாட்டின் பொழுது தொண்ணூற்றி ஐந்து சதவீத நீரானது ஆவியாகி விடும்.

எனவே,நிலவின் மேற்பரப்பில் இருந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே இருந்த நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீரின் ஒரு சிறிய பகுதியையே குறிக்கிறது.

இதன் அடிப்படையில்,நிலவில்,தற்பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் நீரின் அளவில், நீர் இருந்து இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே,நிலவிலும்,பூமியிலும்,நீர் பெருமளவில் காணப் படுவதன் அடிப்படையிலும்,சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்துக் கூறப் படும்,தூசித் தட்டுக் கருத்தானது ஒரு தவறான கருத்து என்பது,ஆதாரப் பூர்வமாகத்  தெரிய வந்துள்ளது.

கிரகங்கள் எல்லாம்,சூரியனை ஏன் வெவ்வேறு கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருக்கிறது?

முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சுழன்றதாகவும்,
அப்பொழுது,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும், ஓரப் பகுதியில் இருந்த, தூசி மற்றும் வாயுக்கள், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, எல்லாக் கிரகங்களும், சூரியனை ஒரே தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு, நிலவானது,பூமியைச்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது, முன் ஒரு காலத்தில்,பூமியின் மேல்,தியா என்று பெயர் சூட்டப் பட்ட,செவ்வாய் கிரக அளவுள்ள,ஒரு கோள் அதி வேகத்தில் மோதியதாகவும், அப்பொழுது ஏற்பட்ட, அதீத வெப்பத்தில்,பூமியின் மேலடுக்குகள் ஆவியாக்கப் பட்டு ,அதன் பகுதிகளானது,பூமியின் சுற்றுப் பாதைக்குத் தள்ளப் பட்டதாக நம்பப் பட்டது.

அதன் பிறகு, பூமி மற்றும் தியா கிரகத்தின் சிதறுண்ட பாகங்களானது, ஒன்றாக இணைந்ததால்,நிலா உருவானதாகவும்,நம்பப் பட்டது.

இந்தக் கருத்தானது பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படுகிறது.

இந்த மோதலின் பொழுது,அதீத வெப்பம் உருவானதாகவும்,அப்பொழுது பாறைகள் கூட உருகி இணைந்ததாகவும் கூறப் படுகிறது.

இது போன்ற அதீத வெப்ப நிலையில்,ஹைட்ரஜன்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்து விட்டிருக்கும், என்பதால் நிலவில் இது போன்ற,எளிதில் ஆவியாகக் கூடிய, வாயுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று எதிர் பார்க்கப் பட்டது.

ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்த்ததற்கு மாறாக,தற்பொழுது, நிலவில் நீர் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நிலவில் எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக அளவில் நீர் இருப்பதன் அடிப்படையில்,நிலா எப்படி உருவானது என்பதற்கு கூறப் பட்ட பிரமாண்ட மோதல் கருத்த்தின் மேல் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில்,பிரமாண்ட மோதல் என்று அழைக்கப் படும் ஒரு நிகழ்வு,நடைபெற வில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே,நிலவானது ஏன்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் வலம் வராமல்,அந்தத் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில்,பூமியை வலம் வந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன  என்ற கேள்வியும்,விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது.


கிரகங்கள் எல்லாம் ஏன் தன் அச்சில் சாய்ந்த நிலையில்,சுழன்று கொண்டு இருக்கின்றன?


அதே போன்று,பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி, சாய்ந்து இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில் பூமியின் மேல் தியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நாசாவின் இணைய தளத்தில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே,பூமி ஏன் தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி,சாய்ந்த நிலையில், சுழன்று கொண்டு இருக்கிறது என்ற கேள்வியும், விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

அதே போன்று,யுரேனஸ் கிரகமானது,தன் அச்சில் தொண்ணூறு டிகிரி சாய்வான நிலையில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், முன் ஒரு காலத்தில் யுரேனஸ் கிரகத்தின் மேல் ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நம்பப் படுகிறது.
ஆனால்,சூரிய மண்டலத்தில், பூமி மற்றும் யுரேனஸ் மட்டுமின்றி, புதன்,வெள்ளி,செவ்வாய், வியாழன்,சனி, நெப்டியூன் ஆகிய அணைத்து கிரகங்களுமே,அதனதன் அச்சில் சாய்ந்த நிலையிலேயே ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அப்படியென்றால் எல்லாக் கிரகங்களின் மேலும்,ஒரு கிரகம் மோதியதா என்ற கேள்வி எழுகிறது.
அத்துடன்,கிரகங்கள் தன் அச்சில் சாய்ந்த நிலையில் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் கூறப் படும் விளக்கத்தின் மேலும் சந்தேகம் எழுகிறது.

புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குக் காரணம் என்ன?

இதே போன்று,சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும், தளத்தில் இருந்து,புதன் கிரகமானது ஏழு டிகிரி கோணத்தில்,வலம் வந்து கொண்டு இருப்பது புதிராக இருந்தது.

அத்துடன்,புதன் கிரகமானது,சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கு திரும்ப வராமல்,ஒவ்வொரு சுற்றுக்கும்,சிறிது இடம் மாறி, புதிய இடத்துக்கு வந்ததும் புதிராக இருந்தது.

சர் ஐசக் நியூட்டனால், இந்தப் புதிருக்கு விளக்கம் கூற இயலவில்லை.

நூற்றி தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கேள்விக்கு யாராலும் விளக்கம் கூற இயலவில்லை.
அப்பொழுது ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல, மாறாக ஈர்ப்பு என்பது ஒரு விளைவு.
அதாவது, கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதற்குச் சூரியனின் ஈர்ப்பு விசையானது, நேராகச் செல்லும் கிரகத்தின் பாதையைத் தொடர்ந்து வளைப்பதே காரணம் என்று, நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.
மாறாகச்  சூரியனின் நிறையால் சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது, வளைக்கப் படுகிறது.
அதனால் சூரியனுக்கு அருகில் ஒரு பள்ளம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில்,சூரியனுக்கு அருகில் வந்த கிரகங்களானது அந்தப் பள்ளத்துக்கு உள்ளே செல்வதால் அதன் பாதையானது வளைவாக இருக்கிறது, என்று ஐன்ஸ்டீன் விளக்கம் கூறினார்.

ஆனால், ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம்தான் தவறு.

ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது.
பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது.
இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.

திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது.
உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில், ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசை என்பதை நிரூபிக்கும் வண்ணம்,சூரியனைச் சுற்றிச் செல்லும்,வால் நட்சத்திரங்களின் பாதையானது, வியாழன்,மற்றும் சனி போன்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் சிறிது இழுக்கப் படுவதால்,அந்த வால் நட்சத்திரங்களானது சூரியனுக்கு அருகில் வரும் காலமானது,மாறுகிறது.
இதற்கு, வியாழன் மற்றும் சனி போன்ற பெரிய கிரகங்களின் ஈர்ப்பு விசையால், சூரியனைச் சுற்றும் அந்த வால் நட்சத்திரங்களின் பாதையானது,சிறிது மாறுவதே காரணம்.
இவ்வாறு,சூரியனைச் சுற்றிச் செல்லும் நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையும்,அந்த வால் நட்சதிரங்களினானது,சூரியனுக்கு அருகில் வரும் காலம் மாறுவதும்,ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பதை நிரூபிக்கும் ஆதார நிகழ்வு ஆகும்.

இதே போன்று,புளூட்டோவின் ஈர்ப்பு விசையால்,அதன் நிலவான சரண்,புளூட்டோவை வலம் வரும் பொழுது,சரணின் ஈர்ப்பு விசையால்,புளூட்டோவும்,சிறிய அளவில்,வட்டமடிக்கிறது.

அத்துடன், தற்பொழுது,வேற்று கிரகங்கள் அதன் நட்சத்திரங்களில் ஏற்படுத்தும் அசைவை அளந்து அறிந்ததன் அடிப்படையில், ஆயிரத்திற்கும் அதிகமான வேற்று கிரகங்களை, விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதே போன்று,முழு நிலவு அன்று,கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பதன் மூலமாகவும் ஈர்ப்பு என்பது, நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

இதே போன்று,ஸ்ருதினி 3753  என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு விண் பாறையானது,பூமியைச் சுற்றிலும் குதிரை லாடம் போன்ற சுற்றுப் பாதையில், சுற்றிக் கொண்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இரண்டாவது நிலா என்று அழைக்கப் படும் அந்த விண் பாறையானது,குதிரை லாட வடிவில் ,பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதற்கு,பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையின் பாதிப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
எனவே, ஈர்ப்பு என்பது சர் ஐசக் நியூட்டன் கூறிய படி ஒரு விசையே என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

அத்துடன்,புதன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்கு, ஐன்ஸ்டீன் கூறிய விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே,புதன் கிரகமானது,ஏன் சூரியனை மற்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியானது விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
அதே போன்று, மற்ற கிரகங்களும்,ஏன் சூரியனைச் சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வியும் விடை கூறப் பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது.



அத்துடன்,தூசித் தட்டுக் கருத்தின் படி,கிரகங்கள் எல்லாம்,அதனதன் அச்சில் சாயாமல் சுழன்று கொண்டு இருக்க வேண்டும் என்றும், எதிர் பார்க்கப் படுகிறது.
ஆனால்,புதன் கிரகம் உள்பட,அனைத்துக் கிரகங்களும், சூரியனை சாய்வான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக,புதன் கிரகமானது, தன் அச்சில், 0.03,  டிகிரியும், வெள்ளி கிரகமானது, தன் அச்சில், 2.64 ,டிகிரியும்,செவ்வாய் கிரகமானது, 25.19,தன் அச்சில்,டிகிரியும்,வியாழன் தன் அச்சில், 3.13  ,டிகிரியும், சனி தன் அச்சில், 26.73  ,டிகிரியும், யுரேனஸ் தன் அச்சில், 82.23 ,டிகிரியும், நெப்டியூன் தன் அச்சில், 28.32 ,டிகிரியும்,சாய்ந்த படி சுழன்று கொண்டு இருக்கின்றன.
எனவே,கிரகங்கள் ஏன் வெவ்வேறு கோணத்தில்,சாய்ந்த நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
முக்கியமாக,சூரியன் கூட,தன் அச்சில், 7.25 , டிகிரி சாய்ந்த நிலையில்தான் தன் அச்சில் ,சுழன்று கொண்டு இருக்கிறது  என்பதும் குறிப்பிடத் தக்கது.

       
சூரிய மண்டலத்தின் புதிர்களை விடுவித்தல்.


முக்கியமாகச் சூரியனும் ,அதன் கிரகங்களும்,முன் ஒரு காலத்தில், விண்வெளியில்,இருந்த ஒரு ராட்சத வாயு மேகம் சுருங்கிச் சுழன்ற
பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும், அதனைச் சுற்றிச் சுழன்று கொண்டு இருந்த தூசி மற்றும் வாயுக்களானது,  ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது.
எனவே,தட்டுக் கருத்தின் படி,கிரகங்கள் எல்லாம் ஒரே தளத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
ஆனால்,பூமியானது தன் அச்சில்,இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில்,சுழன்று கொண்டு இருக்கிறது,





ஆனால்,சூரியனைக் கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அதே போன்று,பூமியானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகமானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக ,வெள்ளி கிரகமானது,3.39 டிகிரி கோணத்திலும்,செவ்வாய் கிரகமானது,1.85, டிகிரி கோணத்திலும்,வியாழன் கிரகமானது,1.31, கோணத்திலும்,சனி கிரகமானது,2.49,கோணத்திலும்,யுரேனஸ் கிரகமானது,0.77, டிகிரி கோணத்திலும்,நெப்டியூன் கிரகமானது,1.77, டிகிரி கோணத்திலும், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
எனவே,ஏன் இவ்வாறு கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.

உண்மையில்,இந்தக் கிரகங்கள் எல்லாம்,ராட்சத வாயு மேகம் சுருங்கிச் சுழன்றதால் உருவாக வில்லை.
மாறாக, விண்வெளியில் சூரியன் பயணம் செய்து கொண்டு இருந்த பொழுது,வெவ்வேறு காலத்தில்,சூரியனால் ஈர்க்கப் பட்டு, ஆவியாக்கப் பட்ட நட்சத்திரங்களின் மையக் கோளங்கள் ஆகும்.
அதனாலேயே,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒவ்வொரு கிரகங்களும்,வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
அதே,போன்று, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒவ்வொரு கிரகங்களும், வெவ்வேறு கோணத்தில்,அதன் அச்சில் சாய்ந்த நிலையில் சுழன்று கொண்டு இருக்கின்றன.
ஆதாரங்கள்.
எரிந்து முடிந்த நட்சத்திரத்துக்கு உள்ளே உருவாகி இருந்த, நிலா அளவு வைரக் கோளப் படிகம்.
பி பி எம் 370 93 என்று அழைக்கப் படும் ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் நிலாவை விடப் பெரிய ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருக்கிறது.

நிலவின் குறுக்களவு 3,475 கிலோ மீட்டர்தான் ,ஆனால் எரிந்து முடிந்த நட்சத்திரமான பி எம் 370 93 க்குள் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகத்தின் குறுக்களவு 4,020 கிலோ மீட்டர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான வைரக் கோளத்தைச் சுற்றிலும் வாயுக்கள் சூழ்ந்து இருக்கிறது.

பூமியில் இருந்து ஐம்பது ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் ,இந்த எரிந்து முடிந்த நட்சத்திரத்தை, ஹார்வர்ட் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,நில நடுக்கத்தை உணரும் கருவிகள் மூலம் கண்டு பிடித்தனர்.

பி பி எம் 370 93 நட்சத்திரம் எரிந்து முடிந்த நிலையில் அதன் மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கார்பன் அணுக்களானது, அதனைச் சுற்றி இருந்த பிரமாண்ட வாயுக்களின் அழுத்தத்தால் வைரக் கோளமாக உருவாகி இருக்கிறது.

விண்வெளியில் வைரக் கிரகங்கள்.
இந்த நிலையில்,அதிவெப்பக் கதிர் வீச்சு நட்சத்திரத்தை மிக நெருக்கமாக வலம் வந்து கொண்டு இருக்கும் சிறிய கிரகங்களானது, வைரக் கிரகங்களாக இருக்கக் கூடும்.என்று விஞ்ஞானிகள் விளக்கம்.
கிரகங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு விடை காண,விஞ்ஞானிகள் விண்வெளியில் தேடிய பொழுது,பல நட்சத்திரங்களைச் சுற்றி பெரும் அளவில் தூசியும் வாயுக்களும் சுழன்று கொண்டு இருப்பதைக் கண்டனர்.

அதன் அடிப்படையில்,நமது சூரியக் குடும்பத்தை மாதிரியாக வைத்து,ஒரு கருத்து உருவாக்கப் பட்டது.

அதன் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் இருக்கும் தூசிகளும் வாயுக்களும் ஆவியாகி விடும் என்பதால் கிரகங்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதாவது மைய நட்சத்திரத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உருவாகும் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில்,
 கடந்த 1992 ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த அலக்ஸ் சாண்டர் வோல்சான் என்பவர்,ஒரு வேற்று கிரகத்தைக் கண்டு பிடித்தார்.

ஆனால் அவரின் கண்டு பிடிப்பை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

ஏனென்றால் வோல்சான் கண்டு பிடித்த கிரகமானது நமது சூரியனை விட பல மடங்கு வெப்பமான கதிர் வீச்சை வெளியிடக் கூடிய நட்சத்திரமாக இருந்தது.

அத்துடன் அந்தக் கிரகமானது,அந்த அதிவெப்ப நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாகவும் வலம் வந்து கொண்டு இருந்தது.

எனவே எப்படி ஒரு கிரகம் ஒரு அதிவெப்ப நட்சத்திரத்துக்கு மிக அருகில் உருவானது?முக்கியமாக எப்படி அந்த கிரகமானது அதிவெப்பச் சூழலில் ஆவியாகாமல்,
 அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்தக் கேள்விக்கு,டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி.அந்த அதிவெப்ப நட்சத்திரத்துக்கு அருகில் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு வைரப் படிகங்களால் ஆனா வைரக் கிரகங்களாக இருக்கும் என்று விளக்கம் கூறி இருந்தார்.

ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் எப்படி வைரம் உருவாக முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்,விண்வெளியில் பல நட்சத்திரங்கள்,
 அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களின் வாயு மண்டலத்தை, ஆவியாக்கிக் கொண்டு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.

அத்துடன்,பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள்,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலாவை விடப் பெரிய அளவில் ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதையும் கண்டு பிடித்தனர்.

இதன் அடிப்படையில் நான்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.

குறிப்பாக எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களை அதி வெப்ப நட்சத்திரங்கள் கவர்ந்து இழுத்து அதன் வெளிப் பகுதி வாயு மண்டலத்தை ஆவியாக்கி விடும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகங்களானது,வைரக் கிரகங்களாக அதி வெப்ப நட்சத்திரங்களை வலம் வருகின்றன என்று விளக்கம் கூறி இருந்தேன்.

அதன் அடிப்படையில்,நமது பூமி உள்பட,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் மற்றும் அந்தக் கிரகங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் துணைக் கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவான பிறகு,சூரியனின் ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுக்கப் பட்ட பொழுது,அதன் வெளிப் பகுதியில் இருந்த வாயுக்களானது விண்வெளியில் விசிறியடிக்கப் பட்ட பிறகு தற்பொழுது கிரகங்களாகவும் துணைக் கிரகங்களாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன,
 என்று தெரிவித்து இருந்தேன்.
சூரியனைக் கிரகங்கள்,சாய்வான கோணத்தில்,நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்பு,சூரியனைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கத்தைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்ளர்தான்,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில்,வலம் வந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்துக் கூறினார்.
ஆனாலும் அவர், கிரகங்கள்,சூரியனை வலம் வருவதற்கான காரணம் குறித்து சிந்திக்க வில்லை.
இந்த நிலையில்,ஒரு வால் நட்சத்திரம், சூரியனைச் சுற்றிச் செல்வதை அறிந்த,சர் ஐசக் நியூட்டன்,சூரியனுக்கு ஈர்க்கும் சக்தி இருப்பதை அறிந்தார்.
அதே போன்று,நிலவானது,பூமியை சுற்றிவருவதற்கும்,ஈர்ப்பு விசையே காரணம் என்று,நியூட்டன் புரிந்து கொண்டார்.
அப்படியென்றால் நிலா ஏன் பூமியின் மேல் விழாமல்,பூமியை சுற்றுகிறது என்று நியூட்டன் சிந்தித்தார்.
பூமிக்கு அருகில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதாகவும்,தொலைவில் செல்லச் செல்ல பூமியின் ஈர்ப்பு விசையானது குறையும் என்றும் நியூட்டன் கருதினார்.
அதன் அடிப்படையில்,நேராகச் செல்லும் நிலவை,பூமி தொடர்ந்து இழுப்பதால்,நிலவின் பாதையானது,தொடர்ந்து வளைக்கப் படுவதால், நிலவானது,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது,என்று நியூட்டன், விளக்கம் கூறினார்.
ஆனால் நிலவானது, ஏன் நீள் வட்டப் பாதையில்,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு நியூட்டன் விளக்கம் கூற வில்லை.
அதே போன்று, சூரியனைக் கிரகங்கள்,சாய்வான கோணத்தில், வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், நியூட்டன் விளக்கம் கூற வில்லை.
இந்த நிலையில்,சூரியனைக் கிரகங்கள் நீள் வட்டப் பாதையில்,வலம் வருவதற்கும்,கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கும், எனது விளக்கத்தை முன் வைக்கிறேன்.
கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கும்,சாய்வான சுற்றுப் பாதைக்கும் காரணம் என்ன ?
சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் அனைத்துமே எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் உள்ளே உருவாகி,சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள்.

சூரியனை நோக்கி வந்த சிறிய கிரகங்களை,மற்ற கிரகங்கள் ஈர்த்து இருக்கின்றன.

குறிப்பாக கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியானது,பருத்து இருப்பதால்,அதன் துணைக் கிரகங்களானது,நிறை ஈர்ப்பு விசையின் படி,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில்,அந்தக் கிரகங்களானது.சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்ற அதே வேளையில்,விண் வெளியில்,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.

எனவே,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது.சூரியனை நோக்கி நகர்கிறது.

இதனால்,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர வேண்டிய கிரகங்களானது,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்குச் சாய்வான கோணத்தில் வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.

அதே போன்று,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வர வேண்டிய,துணைக் கிரகங்களும்,சூரியனை நோக்கி நகரும்,கிரகங்களை நோக்கி நகர்வதால்,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர இயலாமல்,அந்தக் கிரகங்களின் நில நடுக் கோட்டுக்கு சாய்வான தளத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦



சூரியனைக் கிரகங்கள், ஏன் வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன?

பூமியானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஏழு டிகிரி கோணத்தில்,புதன் கிரகமானது, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அதே போன்று,வெள்ளி கிரகமானது,3.39 டிகிரி கோணத்திலும்,செவ்வாய் கிரகமானது,1.85, டிகிரி கோணத்திலும்,வியாழன் கிரகமானது,1.31, கோணத்திலும்,சனி கிரகமானது,2.49,கோணத்திலும்,யுரேனஸ் கிரகமானது,0.77, டிகிரி கோணத்திலும்,நெப்டியூன் கிரகமானது,1.77, டிகிரி கோணத்திலும், சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
எனவே,ஏன் இவ்வாறு கிரகங்கள், வெவ்வேறு கோணத்தில்,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கின்றன? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
சூரியனானது,விண்வெளியில்,வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.இதே போன்று,விண்வெளியில் பல எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களும்,மிதந்து சென்று கொண்டு இருக்கின்றன.
அது போன்ற எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களைச் சூரியனானது,தனது ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து இழுக்கிறது.
அப்பொழுது,சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக, எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மேற்பகுதியில் இருக்கும்,ஹைட்ரஜன்,ஹீலியம் போன்ற இலேசான வாயுக்கள்,ஆவியாகி விடுகிறது.இதனால் அந்த நட்சத்திரத்திற்கு உள்ளே,இருக்கும், ஆக்சிஜன்,சோடியம், கால்சியம்,மெக்னீசியம், கார்பன்,சிலிக்கன்,போன்ற கனமான வாயுக்கள்,குளிர்ந்து திரண்டு கிரகமாக உருவாகுகின்றன.
முக்கியமாகச் சூரியனின் துருவப் பகுதியை விட நடுப் பகுதியே, அதிகம் பருத்து இருப்பதால்,அந்தப் பகுதியிலேயே,அதிக நிறை இருக்கிறது.
எனவே,சூரியனால், கவர்ந்து இழுக்கப் பட்டு, கிரகமாக மாறிய எரிந்து முடிந்த நட்சத்திரமும்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வரத் தொடங்குகிறது.
குறிப்பாக ,சூரியனின் வட துருவப் பகுதியானது,சூரியன் செல்லும் திசையை நோக்கி திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில்,சூரியன் நகர்ந்து கொண்டு இருப்பதால்,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும்,கிரகத்தின் சுற்றுப் பாதையானது சாய்ந்து விடுகிறது.
அதாவது,சூரியனின் நடுப் பகுதியை கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,சூரியன் முன் நோக்கி நகர்ந்து விடுவதால்,இப்பொழுது,சூரியனின் நடுப் பகுதியை மையமாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகமானது, தற்பொழுது,புதிய இடத்தில் இருக்கும் சூரியனை துரத்திச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.
எனவே,ஒரே நேரத்தில்,சூரியனின் நடுப் பகுதியை வலம் வருவதற்கு,ஒரு கிரகமானது,சூரியனைப் மேலும் கீழுமாகவும் சுற்ற வேண்டும்,அதே நேரத்தில் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் சூரியனைக் பக்க வாட்டிலும், துரத்திச் செல்ல வேண்டும்.
அதாவது,விண்வெளியில்,சூரியன்,கிடை மட்டமாக நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனின் இடுப்புப் பகுதியை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருப்பதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக அமைகிறது.இவ்வாறு கிரகங்களின் சுற்றுப் பாதையானது சாய்வாக மாறுவதால்,கிரகங்களின் சுற்றுப் பாதையும்,சாய்வான கோணத்தில்,நீள் வட்டமாக மாறுகிறது.
இதனை ஒரு எளிய கற்பனை நிகழ்வு மூலம் விளக்க முடியும் என்று நம்புகிறேன்.
உதாரணமாக, ஆகாயத்தில் ஒரு மஞ்சள் நிற ராட்சத பலூன் மிதப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது, அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை, சில காகங்கள் மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனானது, முன் நோக்கி நகரத் தொடங்குவதாகக் கற்பனை செய்யுங்கள்.
என்ன ஆகும்,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனை வட்டமடித்துக் கொண்டு இருந்த காகங்களானது ,அந்த ராட்சத மஞ்சள் நிற பலூனைத் தொடர்ந்து சென்ற படி, வட்டமடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படும்.
அதனால் அந்த காகங்களின் வட்டப் பாதையானது, சற்று சாய்வாக மாரிவிடுவதுடன்,சிறிது நீட்சியும் அடைந்து விடும்.
இதே போன்றுதான், விண்வெளியில் முன் நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப்பாதையும் சாய்வாக மாறுவதுடன் நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது.
இந்த நிலையில், அந்தக் காகங்களில் ஒன்றை, ஒரு சிட்டுக் குருவியும், மேலிருந்து கீழாக வட்டமடிப்பதாகக் கற்பனை செய்யுங்கள்.
என்ன ஆகும்,காகத்தை வட்டமிடும் சிட்டுக் குருவியின் வட்டப் பாதையும்,நீள் வட்டமாகவும் சாய்வாகவும் மாறி விடும்.
இதே போன்றுதான்,சூரியனைத் தொடர்ந்த படி,சூரியனை மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கும் பூமியின் வட்டப் பாதையும் சாய்வாகவும் நீள் வட்டப் பாதையாகவும் மாறும் அதே நேரத்தில்,பூமியை மேலிருந்து கீழாக வட்டமடிக்கும் நிலவின் சுற்றுப் பாதையும் சாய்வாகவும்,நீள் வட்டமாகவும் மாறி விடுகிறது.
சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால்,பருத்து இருக்கும் சூரியனின் நடுப் பகுதியைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் திசைக்குத் தொண்ணூறு டிகிரி கோணத்தில்,சூரியனானது, நகர்ந்து கொண்டு இருப்பதே, கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கும்,சாய்வான சுற்றுப் பாதைக்கும் காரணம்.
கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வருவதற்குக் காரணம் ஆகும்.

கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணத்தில் வலம் வருவதற்கு, கிரகங்கள் எல்லாம்,சூரியனை வெவ்வேறு தொலைவில் இருந்தபடிவலம் வந்து கொண்டு இருப்பதே காரணம் ஆகும்.

நிலவானது,சூரியனைப் பூமி ,வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்திற்கு,ஐந்து டிகிரி சாய்வாக வலம் வந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன ?
சூரியனின் வட துருவப் பகுதியானது,வேகா நட்சத்திரம் இருக்கும்,திசையை நோக்கி இருப்பதுடன்,அதே திசையை நோக்கி,வினாடிக்கு,இருபது கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில்,பூமியானது,சூரியனின்,நடுப் பகுதியை,வலம் வர வேண்டும் என்றால்,பூமியானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்குத் தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வர வேண்டும்.
அவ்வாறு,பூமியானது,சூரியனின்,நடுப் பகுதியை,வலம் வரும் பொழுது, சூரியனானது,முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.எனவே, பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வருவதற்கு,சூரியனுடன்,சற்று முன் நோக்கியும் நகர வேண்டியதாகிறது.
இவ்வாறு ஒரே நேரத்தில்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே,சூரியனுடன் முன் நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதால்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,சாய்வான கோணத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.
அதே போன்று,நிலவானது,பூமியின்,நில நடுக் கோட்டுப் பகுதியை,வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமியானது,சூரியனின் நடுப் பகுதியை,வலம் வருவதற்காக, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

எனவே,நிலவும்,பூமியின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வருவதற்காக,பூமியுடன்,முன் நோக்கி நகரும் பொழுது,நிலவின் சுற்றுப் பாதையானது,சாய்வான கோணத்தில் அமைவதுடன்,நீள் வட்டப் பாதையாகவும் மாறி விடுகிறது.

                      0000000000000000000000000